செய்திகள்
எனக்குள் ஒளிந்துள்ள என்னை தேடிக்கொள்ளவே கேதார்நாத் பயணம் - மன் கி பாத்தில் பிரதமர் மோடி
மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, எனக்குள் ஒளிந்துள்ள என்னை தேடிக்கொள்ளவே கேதார்நாத்துக்கு பயணம் மேற்கொண்டேன் என தெரிவித்தார்.
புதுடெல்லி:
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் நடைபெற்றுவரும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து இந்த நிகழ்ச்சியில் தனது கருத்தை பதிவுசெய்து வருகிறார்.
மக்களின் பிரச்சனைகளைப் பற்றி அரசு அறிந்துகொள்ள ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி உதவுவதாக பல சந்தர்ப்பங்களில் மோடி குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று மீண்டும் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
தேர்தலால் மன் கி பாத் நிகழ்ச்சியை நான் இழந்ததாகவே உணரவில்லை. மக்களை இழந்ததாகவே உணர்ந்தேன். இந்த நிகழ்ச்சியில் என்ன பேச வேண்டும் என்பதையும் மக்கள் எனக்கு கடிதம் எழுதி அனுப்புகின்றனர். நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வது எப்படி என்ற விஷயங்கள் அதில் உள்ளன.
நாட்டு மக்கள் ஜனநாயகத்தைக் காப்பாற்ற இரண்டாவது முறையாக பாஜகவுக்கு வாய்ப்பளித்துள்ளனர். சிறப்பாக தேர்தலை நடத்திய தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டுக்கள். எனக்குள் ஒளிந்திருக்கும் என்னையே தேடிக்கொள்ள கேதார்நாத் பயணத்தை பயன்படுத்திக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.