செய்திகள்

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை - 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

Published On 2019-01-23 11:54 GMT   |   Update On 2019-01-23 11:54 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று ராணுவ வீரர்களுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #militantskilled #Baramulaencounter #Kashmirencounter
ஜம்மு:

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்துக்கு உட்பட்ட பீன்னர் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று பிற்பகல் அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து நீடித்துவரும் துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ராணுவ தரப்பில் உண்டான இழப்பு தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #militantskilled #Baramulaencounter #Kashmirencounter 
Tags:    

Similar News