இந்தியா

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ.33 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Published On 2024-05-06 04:49 GMT   |   Update On 2024-05-06 04:49 GMT
  • திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் வந்த பயணிகளை சுங்க இலாகாவினர் சோதனை செய்தனர்.
  • உள்ளாடைக்குள் தங்கம் மறைத்து வைத்து கடத்தி வருவது தெரியவந்தது.

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப்பொருட்கள் போன்றவை அடிக்கடி கடத்தி வரப்படுகின்றன. அவற்றை சுங்க இலாகாவினர் அவ்வப்போது மடக்கி பிடித்து வருகின்றனர். ஆனாலும் கடத்தல் சம்பவம் தொடர்ந்தே வருகிறது.

இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் வந்த பயணிகளை சுங்க இலாகாவினர் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடமைகளை பரிசோதித்தபோது எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று உடல் சோதனை நடத்தினர்.

அப்போது அவர் உள்ளாடைக்குள் தங்கம் மறைத்து வைத்து கடத்தி வருவது தெரியவந்தது. அவற்றை சுங்க இலாகாவினர் பறிமுதல் செய்தனர். இதேபோல் மற்றொரு பயணியும் உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 3 தங்க பிஸ்கட்டுகள், ஒரு தங்க நாணயம் உள்பட ரூ.33 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News