செய்திகள்

2015ம் ஆண்டு வெள்ளத்தில் தமிழகத்துக்கு அதிக பாதிப்பு - மக்களவையில் அரசு தகவல்

Published On 2018-12-13 13:18 GMT   |   Update On 2018-12-13 13:18 GMT
கடந்த 2015ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் தமிழகம் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. #ParlimentWinterSession #Flood
புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் மக்களவையில் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் நீர்வளத்துறை இணை மந்திரி அர்ஜுன்ராம் மெக்வால் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
 
கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் 4 ஆயிரத்து 902 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 82 ஆயிரத்து 146 கால்நடைகளும் இறந்துள்ளன.

கடந்த 2015ல் சுமார் ஆயிரத்து 42 பேர் வெள்ளத்தில் பலியாகி உள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் 421 பேர் இறந்துள்ளனர். அந்த ஆண்டில் 57 ஆயிரத்து 291 கோடி ரூபாய் மதிப்பிற்கு சேதம் ஏற்பட்டது. இதில் தமிழகத்தில் மிக அதிகமாக 25 ஆயிரத்து 912 கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டுள்ளது.



2016ம் ஆண்டிலும் சுமார் 5 ஆயிரத்து 675 கோடு ரூபாய் மதிப்பிற்கு சேதம் ஏற்பட்டது. இந்த ஆண்டில் வெள்ளத்தில் சிக்கி ஆயிரத்து 420 பேர் பலியாகினர்.

இதுபோல், 2017ம் ஆண்டில் வெள்ள பாதிப்பால் 2 ஆயிரத்து 062 பேர் இறந்துள்ளனர். 22 ஆயிரத்து 706 கோடி ரூபாய் மதிப்பிற்கு சேதங்கள் ஏற்பட்டன என தெரிவித்துள்ளார். 

2015ல் 3.3 கோடி பேரும், 2016ல் 2.6 கோடி பேரும், 2017ல் 4.7 கோடி பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். #ParlimentWinterSession #Flood
Tags:    

Similar News