செய்திகள்

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்- ரூ.3.13 கோடி உண்டியல் வசூல்

Published On 2018-11-07 05:19 GMT   |   Update On 2018-11-07 05:19 GMT
தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. நேற்று ஏழுமலையானை தரிசித்த பக்தர்கள் உண்டியலில் ரூ.3.13 கோடி காணிக்கையாக செலுத்தியிருந்தனர். #Tirupati
திருமலை:

தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. இலவச தரிசனத்துக்காக வைகுண்டம் காம்ப்ளக்சில் காத்திருந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மலைப்பாதை வழியாக நடந்து வந்த திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 11 மணி நேரமும் ரூ.300 டிக்கெட் எடுத்த பக்தர்கள் 5 மணி நேரமும் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று ஏழுமலையானை 70,713 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் உண்டியலில் ரூ.3.13 கோடி காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.  #Tirupati
Tags:    

Similar News