என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupati temple"

    • கடந்த ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி சி-61 தோல்வியடைந்தது.
    • வருகிற 12-ந் தேதி காலை 10 மணி 17 நிமிடங்களுக்கு பி.எஸ்.எல்.வி சி-62 விண்ணில் ஏவப்பட உள்ளது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வருகிற 12-ந்தேதி பி.எஸ்.எல்.வி சி-62 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

    இதையடுத்து இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் 3 விஞ்ஞானிகள் இன்று காலை ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தனர். அப்போது பி.எஸ்.எல்.வி சி-62 விண்கல மாதிரியை ஏழுமலையான் காலடியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    தரிசனத்திற்கு பின்னர் இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி சி-61 தோல்வியடைந்தது. வருகிற 12-ந் தேதி காலை 10 மணி 17 நிமிடங்களுக்கு பி.எஸ்.எல்.வி சி-62 விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த விண்கலம் வெற்றிகரமாக ஏவ வேண்டும் என்பதற்காக ஏழுமலையானை தரிசனம் செய்தோம். பி.எஸ்.எல்.வி சி 62 மூலம் விவசாயம், ராணுவம் மற்றும் தட்பவெப்ப நிலைகள் அறிய முடியும் என்றார்.

    • 25-ந்தேதி அதிகாலை 5.30 மணி முதல் காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.
    • வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் 24-ந்தேதி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

    திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 25-ந்தேதி ரத சப்தமி விழா கோலாகலமாக நடக்கிறது. அதையொட்டி காலை, இரவு பல்வேறு வாகனச் சேவைகள் நடக்கின்றன.

    அதன் விவரம் வருமாறு:-

    25-ந்தேதி அதிகாலை 5.30 மணி முதல் காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது. அதையொட்டி அன்று காலை 6.45 மணியளவில் சூரியன் உதயமாகும் நேரத்தில் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளும் உக்ர சீனிவாச மூர்த்திக்கு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் 10 மணி வரை சிறிய சேஷ வாகன வீதிஉலா, காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை கருட வாகன வீதிஉலா நடக்கிறது.

    மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகன வீதிஉலா, மதியம் 2 மணி முதல் மாலை 3 மணி வரை கோவில் அருகில் உள்ள ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி, மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகன வீதிஉலா, இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.

    ரத சப்தமி விழாவையொட்டி 25-ந்தேதி கோவிலில் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவைகள் ஆகிய ஆர்ஜித சேவைகள், சிறப்பு தரிசனங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசனம், வி.ஐ.பி. புரோட்டோக்கால் முக்கியஸ்தர்களை தவிர அனைத்து வி.ஐ.பி. பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் 24-ந்தேதி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

    மேலும் ரத சப்தமியையொட்டி திருப்பதியில் 24 முதல் 26-ந்தேதி வரை இலவச தரிசன பக்தர்களுக்கான டைம் ஸ்லாட் டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வைகுண்ட ஏகாதசிக்குப் பிறகு மொத்தம் 7 லட்சத்து 83 ஆயிரத்து 411 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
    • இது முந்தைய ஆண்டுகளை விட கணிசமாக அதிகரித்துள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட துவார தரிசனம் கடந்த 20-ந்தேதி முதல் நேற்று வரை நடந்தது. இன்று ஏகாந்த சேவைக்குப் பிறகு, வைகுண்ட வாசல் மூடப்பட்டது.

    இதன் மூலம், கோவிலில் வழக்கமான தரிசன முறை மீண்டும் அமலுக்கு வந்தது. இன்று முதல் அனைத்து வகையான சிறப்பு தரிசனங்களும் சேவைகளும் வழக்கம் போல் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு, வைகுண்ட துவார தரிசனத்தின் போது திருமலையில் சாதனை எண்ணிக்கையிலான பக்தர்கள் குவிந்தனர். தேவஸ்தான அதிகாரிகள் வெளியிட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, வைகுண்ட ஏகாதசிக்குப் பிறகு மொத்தம் 7 லட்சத்து 83 ஆயிரத்து 411 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

    இது முந்தைய ஆண்டுகளை விட கணிசமாக அதிகரித்துள்ளது. முதல் நாட்களில் கூட்டம் அதிகமாக இருந்தபோதிலும், எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களையும் தடுக்க அதிகாரிகள் ஒருங்கிணைந்தனர்.

    வைகுண்ட துவார தரிசன நாட்களில் ரூ.40.43 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்தது.

    முந்தைய ஆண்டுகளிலும், வைகுண்ட தரிசனத்தின் போது உண்டியல் வருமானம் சாதனை அளவில் பதிவானதாக தெரிவித்தனர்.

    • ஒரு நாளைக்கு சராசரியாக 75 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்துள்ளனர்.
    • தங்கம், வெள்ளி நகைகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டு உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 30-ந் தேதி இரவு வைகுண்ட துவார வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    முதல் 3 நாட்களுக்கு முன்பதிவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் சாமானிய பக்தர்களும் தரிசனம் செய்யும் வகையில் நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    முன்னுரிமை என்ற அடிப்படையில் திருப்பதியை சேர்ந்த பக்தர்கள் தினமும் 5 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்கப்பட்டது.

    வைகுண்ட துவார தரிசனம் வழியாக தரிசனம் செய்வதற்காக இந்தியா மட்டும் இன்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர்.

    வைகுண்ட துவார தரிசனம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு பெறுகிறது. அதன் பிறகு கோவிலில் தினசரி வழிபாடு வழக்கம்போல் நடைபெறும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 9 நாட்களில் 7, 09,831 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

    ஒரு நாளைக்கு சராசரியாக 75 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்துள்ளனர். ரூ.36.86 கோடி உண்டியலில் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர். மேலும் தங்கம், வெள்ளி நகைகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டு உள்ளது.

    திருப்பதியில் நேற்று 85, 752 பேர் தரிசனம் செய்தனர். 19,443 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.69 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர்.
    • அலிபிரி சோதனை சாவடியில் பக்தர்களின் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட துவார தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது. தொடர் விடுமுறை காரணமாக வைகுண்ட துவார தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான மக்கள்கள் குவிந்தனர்.

    பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர். ஏ.ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எவ்வளவு பக்தர்கள் தரிசனத்துக்கு வந்துள்ளனர் என கணித்து குறைந்த நேரத்தில் தரிசனத்திற்கு அனுமதித்தனர்

    அலிபிரி சோதனை சாவடியில் பக்தர்களின் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இன்று காலையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    திருப்பதியில் நேற்று 88,662 பேர் தரிசனம் செய்தனர். 24, 417 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 5.05 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • சந்திர கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பே கோவில் நடைகளை மூடும் பாரம்பரியம் உள்ளது.
    • மாற்றங்களை கவனத்தில் கொண்டு பக்தர்கள் தங்கள் தரிசன திட்டங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

    திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி மாலை 3.20 மணியில் இருந்து மாலை 6.47 மணி வரை சுமார் 3½ மணி நேரம் சந்திர கிரகணம் நிகழ்கிறது. சந்திர கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பே கோவில் நடைகளை மூடும் பாரம்பரியம் உள்ளது.

    அதன்படி, மார்ச் மாதம் 3-ந்தேதி காலை 9 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்படுகிறது. கோவில் சுத்தி உள்ளிட்ட பரிகாரச் சடங்குகள் முடிந்ததும் இரவு 8.30 மணிக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    சந்திர கிரகணம் காரணமாக கோவிலில் மார்ச் மாதம் 3-ந்தேதி நடக்க இருந்த அஷ்டதல பாதபத்மாராதனை சேவை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்காரச் சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு பக்தர்கள் தங்கள் தரிசன திட்டங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 'மது வாங்கிக் கொடுத்தால் மட்டுமே கீழே இறங்குவேன்' என அந்த நபர் முரண்டு பிடித்தார்
    • இது கோயில் அதிகாரிகள் மற்றும் பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

    திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் ராஜகோபுரம் மீது ஏறி தங்க கலசத்தை சேதப்படுத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

    'மது வாங்கிக் கொடுத்தால் மட்டுமே கீழே இறங்குவேன்' என முரண்டு பிடித்து அந்த நபர் போராட்டத்தில் ஈடுபட்டார். இது கோயில் அதிகாரிகள் மற்றும் பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

    குடிபோதையில் இருந்த நபரை சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு திருப்பதி போலீஸ் கைது செய்து அழைத்துச் சென்றது.

    பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில் வசிக்கும் குட்டாடி திருப்பதி என தெரியவந்தது.

    • இலவச தரிசனத்தில் சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்யலாம்.
    • சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கட்டாயமாக பாரம்பரிய உடைகளை அணிந்து வரவேண்டும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. அதையொட்டி 30-ந்தேதி அதிகாலை 2.30 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. முதல் 3 நாட்களுக்கு சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்ய மொத்தம் 25 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். அதில், குலுக்கல் முறையில் 1 லட்சத்து 76 ஆயிரம் பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்வான பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய எஸ்.எம்.எஸ். மற்றும் இ.மெயில் மூலம் தகவல்கள் அனுப்பப்பட்டன. அதில், 30-ந்தேதி 57 ஆயிரம் பக்தர்களும், 31-ந்தேதி 64 ஆயிரம் பக்தர்களும், ஆங்கிலப் புத்தாண்டான நேற்று 55 ஆயிரம் பக்தர்களும் டோக்கன்கள் மூலம் சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கான சொர்க்க வாசல் தரிசனம் முழுமையாக நிறைவடைந்தன.

    இந்தநிலையில் இன்று முதல் 8-ந்தேதி வரை சொர்க்க வாசல் தரிசனத்துக்கான டோக்கன்கள் தேவையில்லை, டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் வருகிற 8-ந்தேதி வரை சாதாரணமாக இலவச தரிசனத்தில் சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்யலாம்.

    அதற்காக கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசனம், ஆர்ஜித சேவைகள், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், மூத்த குடிமக்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கான தரிசனம், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனங்கள் ஆகியவை இன்று முதல் 8-ந்தேதி வரை நடக்காது, அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மேலும் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன டோக்கன்கள் (டைம் ஸ்லாட் டோக்கன்கள்) வழங்கும் கவுண்ட்டர்கள், ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் கவுண்ட்டர்கள், வி.ஐ.பி. பிரேக் தரிசன டோக்கன் கவுண்ட்டர்கள் இந்த நாட்களில் மூடப்பட்டு இருக்கும். இதற்காக எந்தவிதமான பரிந்துரை கடிதங்களும் ஏற்கப்பட மாட்டாது.

    சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கட்டாயமாக பாரம்பரிய உடைகளை அணிந்து வரவேண்டும். ஆண்கள் வேட்டி அல்லது பைஜாமா அணிய வேண்டும். பெண்கள் சேலை அல்லது சுடிதார் அணிய வேண்டும். சாமி தரிசனத்துக்கு வரும் அனைத்துப் பக்தர்களும் ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள், தேவஸ்தான ஊழியர்கள் வழங்கும் அறிவுறுத்தல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    அதேநேரத்தில் திருமலை, திருப்பதி, ரேணிகுண்டா மற்றும் சந்திரகிரி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் உள்ளூர் பக்தர்களுக்காக 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இ.குலுக்கல் முறையின் மூலம் தினமும் 5 ஆயிரம் தரிசன டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 4 ஆயிரத்து 500 டோக்கன்கள் திருப்பதி, ரேணிகுண்டா மற்றும் சந்திரகிரி ஆகிய உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 500 டோக்கன்கள் திருமலை பாலாஜிநகரில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி கோவிலில் இன்று முதல் 8-ந்தேதி வரை இலவச தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி என்பதால் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    • வருகிற 2-ந்தேதி முதல் நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • இன்று காலை ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி சமயதராய் தங்க ரதத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று அதிகாலை தனுர் மாத சுபமுகூர்த்தத்தில் 1.30 மணிக்கு வைகுண்ட வாசல் திறக்கப்பட்டது.

    முதலில் வி.ஐ.பி.க்கள் வைகுண்ட வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, தனது மனைவி குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார்.

    இதேபோல் நடிகர் சிரஞ்சீவி தனது மனைவி சுரேகா, மகள்கள் சுஷ்மிதா, ஸ்ரீஜா ஆகியோருடன் தரிசனம் செய்தார். காலை 6 மணிக்கு மேல் சாதாரண பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று முதல் 3 நாட்கள் ஏற்கனவே தரிசன டிக்கெட் வைத்துள்ள பக்தர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். நேரடி இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு வர வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    வருகிற 2-ந்தேதி முதல் நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி சமயதராய் தங்க ரதத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    வைகுண்ட வாசல் வழியாக ஏழுமலையானை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் பக்தர்களை கட்டுப்படுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய சவுத்ரி கூறியதாவது:-

    வைகுண்ட ஏகாதசியையொட்டி வருகிற 8-ந்தேதி வரை அதிகாலை 1.30 மணி முதல் இரவு 11.45 மணி வரை தொடர்ந்து 20 மணி நேரம் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் வந்தால் 2 அல்லது 3 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்யலாம். வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு 16 வகையான உணவுகள் வழங்கப்படுகிறது.

    மேலும் குடிநீர், டீ, காபி போன்றவையும் வழங்கப்படுகிறது. சிறுவர்களுக்கு பால் வழங்கப்பட்டு வருகிறது. 4.50 லட்சம் லட்டுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றார்.

    • வெளிநாடுகளில் இருந்து தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கட்டாயம் பாரம்பரிய உடை அணிய வேண்டும்.
    • இந்தியா வந்தது முதல் 30 நாட்களுக்குள் மட்டுமே சிறப்பு தரிசனம் வழங்கப்படும்.

    திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருமண பத்திரிகைகளை முழு முகவரியுடன் திருப்பதி தேவஸ்தான நிர்வாக கட்டிடம், கே.டி சாலை, திருப்பதி 51 75 01 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    திருமண பத்திரிகை அனுப்பி வைக்கப்படும் தம்பதிகளுக்கு அட்சதை, மஞ்சள், குங்குமம், வளையல் மற்றும் ஏழுமலையான், பத்மாவதி தாயார் படங்களுடன் ஆசீர்வாத சிறு புத்தகம், கல்யாண சமஸ்கிருதி புத்தகங்கள் ஆகியவை அனுப்பி வைக்கப்படும்.

    இதனை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இதேபோல் வெளிநாடுகளில் வசிக்கும் தெலுங்கர்கள் மற்றும் இந்தியர்கள் குறுகிய விடுமுறையில் இந்தியாவுக்கு வருகின்றனர். அவர்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருப்பது கடினம். எனவே வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

    திருப்பதி மலையில் உள்ள சுபதம் வழியாக நேரடியாக நுழைவாயிலில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.

    ஒருவருக்கு ரூ.300 தரிசன டிக்கெட் வழங்கப்படும். வெளிநாடுகளில் இருந்து தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கட்டாயம் பாரம்பரிய உடை அணிய வேண்டும். இந்தியா வந்தது முதல் 30 நாட்களுக்குள் மட்டுமே சிறப்பு தரிசனம் வழங்கப்படும்.

    குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு தரிசனம் வழங்கப்பட மாட்டாது. அவர்கள் வழக்கம்போல் ரூ.300 தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து தரிசனம் செய்து கொள்ளலாம்.

    நுழைவு வாயிலில் பதிவு செய்யும் போது சர்வதேச அல்லது இந்திய செல்போன் எண்களை வழங்குவது கட்டாயம். விசா வைத்திருந்தால் தாங்கள் வெளிநாட்டு இந்திய குடியுரிமை அல்லது அடையாள அட்டையை காட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 61,583 பேர் தரிசனம் செய்தனர். 28,936 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.25 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • மார்கழி மாத பிறப்பையொட்டி திருப்பதியில் திருப்பாவை பாடப்படுகிறது.
    • வெல்லம் தோசை, சுண்டல், சீரகம் மற்றும் பொங்கல் போன்ற சிறப்பு பிரசாதங்கள் படைக்கப்படுகிறது.

    மார்கழி மாத பிறப்பையொட்டி திருப்பதியில் இன்று முதல் திருப்பாவை பாடப்படுகிறது. இதனையொட்டி இன்று முதல் மூலவர் ஏழுமலையானுக்கு வில்வ இலைகளால் சஹஸ்ர நாமார்ச்சனை செய்யப்படுகிறது.

    ஒவ்வொரு நாளும் ஏழுமலையானுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கிளி அலங்காரம் செய்யப்படுகிறது. வெல்லம் தோசை, சுண்டல், சீரகம் மற்றும் பொங்கல் போன்ற சிறப்பு பிரசாதங்கள் படைக்கப்படுகிறது.

    நாளை (புதன்கிழமை) முதல் ஒரு மாதத்திற்கு சுப்ரபாத சேவை ரத்து செய்யப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 70.251 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 26,862 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.4.66 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளுக்கான ஒதுக்கீடு 24-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
    • திருமலை மற்றும் திருப்பதிக்கான தங்குமிட ஒதுக்கீடு மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.

    திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய மார்ச் மாதத்துக்கான தரிசன டிக்கெட் 18-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். பக்தர்கள் இந்தச் சேவைகளுக்கான மின்னணு குலுக்கல் முறைக்கு (இ-டிப்) 20-ந்தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

    ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளுக்கான ஒதுக்கீடு 24-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். அதே சமயம் திருமலை மற்றும் திருப்பதிக்கான தங்குமிட ஒதுக்கீடு மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். பக்தர்கள் அர்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×