செய்திகள்

சிபிஐ விவகாரம்: மோடியின் சர்வாதிகார ஆட்சியின் வெளிப்பாடு - சித்தராமையா

Published On 2018-10-27 02:38 GMT   |   Update On 2018-10-27 02:38 GMT
சி.பி.ஐ. புலன் விசாரணை அமைப்பில் தற்போது நடந்து வரும் விவகாரம், பிரதமர் மோடியின் சர்வாதிகார ஆட்சியின் இன்னொரு வெளிப்பாடு தான் என்று கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார். #Siddaramaiah
பெங்களூரு :

சி.பி.ஐ. அமைப்பில் எழுந்துள்ள மோதல் விவகாரத்தில், அதன் இயக்குனர் மற்றும் சிறப்பு இயக்குனரை மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பிவிட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் இதுபற்றி கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-

சி.பி.ஐ. புலன் விசாரணை அமைப்பில் தற்போது நடந்து வரும் விவகாரம், பிரதமர் மோடியின் சர்வாதிகார ஆட்சியின் இன்னொரு வெளிப்பாடு தான். ஜனநாயகத்தின் தூண்களை பா.ஜனதா அழித்துவிட்டது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Siddaramaiah
Tags:    

Similar News