செய்திகள்
அரியானாவில் சிபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்
அரியானாவில் சிபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்து ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவியை 3 பேர் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. #Haryana
சண்டிகர்:
அரியானா மாநிலத்தில் சிபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்து சமீபத்தில் ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவி, நேற்று முன் தினம் கோச்சிங் கிளாஸ் சென்று விட்டு தனது கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது காரில் வந்த மூன்று பேர் அவரை கடத்திச் சென்று மறைவிடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர், அங்குள்ள பஸ் ஸ்டாப் ஒன்றில் மாணவியை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, மாணவி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்னும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாத நிலையில், குற்றவாளி தெரிந்தும் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் மாணவியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குற்றவாளிகளை தேடி வருவதாகவும், சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.