search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிபிஎஸ்சி"

    • பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், பாரதி இன்டர் நேஷனல் பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு முதல்முறையாக சிபிஎஸ்சி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர்.
    • அனைவரையும், பாரதி கல்வி அறக்கட்டளையின் தாளாளர் மோகனாம்பாள், தலைவர் செந்தில்குமார் மற்றும் முதல்வர் உமாதேவி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், பாரதி இன்டர் நேஷனல் பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு முதல்முறையாக சிபிஎஸ்சி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாணவி வருணப்பிரியா 500-க்கு 470 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும், மாணவி ஹரிப்பிரியா மற்றும் மாணவர் விக்னேஷ் 458 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவர் விக்னேஷ் 450 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

    தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ-மாணவிகளையும், அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள், உறுதுணையாய் இருந்த பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரையும், பாரதி கல்வி அறக்கட்டளையின் தாளாளர் மோகனாம்பாள், தலைவர் செந்தில்குமார் மற்றும் முதல்வர் உமாதேவி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

    கடந்த மாதம் நடந்த நீட் தேர்வின் முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு முடிவு வெளியிட தடை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. #NEET #NEET2018
    சென்னை:

    மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதன் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கடந்த மாதம் 6-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடந்தது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தானில் தேர்வு மையம்  ஒதுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. நீட் தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.சி.யின் அலட்சியம் காரணமாக மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

    மாணவர்கள் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதும் கேள்வியை எழுப்பியது. இது தொடர்பாக மனித உரிமை ஆணையமும் விசாரணை நடத்தியது. இந்நிலையில், நீர் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியியாகும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 

    www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வினாத்தால் குளறுபடி ஆகியவை காரணமாக தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் சங்கல்ப் என்ற அமைப்பு மனு தாக்கல் செய்தது.

    இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க மறுத்தனர். இதனால், அறிவிக்கப்பட்டபடி 2 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும். #NEET #NEET2018
    சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 4 மாணவர்கள் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர். #CBSE10THResult2018
    புதுடெல்லி:

    மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இந்தியா முழுவதும் மார்ச் 5–ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4–ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வை 16 லட்சத்து 38 ஆயிரத்து 428 மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.

    இந்த தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டன. www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in ஆகிய இணைய தளங்களில் தேர்வு முடிவை மாணவ–மாணவிகள் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மொத்த மதிப்பெண்ணான 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 4 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

    அரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்த ப்ரகார் மிட்டல், உத்தரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னோரை சேர்ந்த ரிம்ஷிம் அகர்வால், ஷாம்லியை சேர்ந்த நந்தினி கார்க் மற்றும் கேரளா கொச்சியை சேர்ந்த ஸ்ரீலக்‌ஷ்மி ஆகிய நான்கு பேரும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர். 

    மண்டல வாரியாக தேர்வு முடிவுகளில் திருவனந்தபுரம் மண்டலம் 99.60 சதவிகித தேர்ச்சியை பெற்றுள்ளது. சென்னை மண்டலம் 97.37 சதவிகிதத்துடன் இரண்டாம் இடமும், அஜ்மீர் மண்டலம் 91.86 சதவிகித தேர்ச்சியுடன் மூன்றாமிடமும் பெற்றுள்ளது.
    ×