செய்திகள்

காங்கிரஸ் தலைவர்களுடன் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே சந்திப்பு

Published On 2018-09-13 06:38 GMT   |   Update On 2018-09-13 06:38 GMT
இந்தியா வந்துள்ள இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இன்று டெல்லியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆனந்த் சர்மா ஆகியோரை நேரில் சந்தித்தார். #Rajapaksa #RajapaksainDelhi #ManmohanSingh #RahulGandhi
புதுடெல்லி:

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்புரமணிய சுவாமி ஆரம்பித்த விராத் ஹிந்துஸ்தான் சங்கத்தின் சார்பாக நேற்று பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு சுப்புரமணிய சாமி அழைப்பு விடுத்து இருந்தார்.

அவரது அழைப்பை ஏற்ற ராஜபக்சே டெல்லி வந்தடைந்தார். அதையடுத்து நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசிய ராஜபக்சே, பல்வேறு தலைவர்களை சந்திப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். #Rajapaksa #RajapaksainDelhi #ManmohanSingh #RahulGandhi
Tags:    

Similar News