செய்திகள்
வெங்கையா நாயுடு அளிக்கவுள்ள விருந்தை புறக்கணிக்கும் காங்கிரஸ்
மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய உறுப்பினர்களுக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அளிக்கும் விருந்தில் காங்கிரஸ் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளது. #VenkaihNaidu #Congress
புதுடெல்லி:
மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவை துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹரிவன்ஷ் ஆகியோருக்கு மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு நாளை காலை விருந்து அளிக்கவுள்ளார்.
இந்த விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அளிக்கவுள்ள விருந்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்க போவதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. #VenkaihNaidu #Congress