செய்திகள்
டெல்லி: துணை ஜனாதிபதி வீட்டில் சங்கராந்தி கொண்டாட்டம் - பிரதமர் மோடி பங்கேற்பு
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் டெல்லி இல்லத்தில் சங்கராந்தி பண்டிகை இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. #sankaranthi #VenkaiahNaidu
புதுடெல்லி:
இந்தியா முழுவதும் கடந்த வாரம் சங்கராந்தி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்ச்சியாக, தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் இல்லத்தில் சங்கராந்தி பண்டிகை இன்று மாலை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி உள்பட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும், பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளும் இதில் தங்களது குடும்பத்துடன் பங்கேற்றனர்.#sankaranthi #VenkaiahNaidu #tamilnews