செய்திகள்

குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: லாலு பிரசாத் ஆரூடம்

Published On 2017-12-10 13:03 GMT   |   Update On 2017-12-10 13:03 GMT
குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையும் என ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
பாட்னா:

குஜராத் மாநிலத்தில் 182 இடங்களுக்கான சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், 89 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் 68 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமையும் என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத், ‘குஜராத் மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அதிகளவில் மக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்டுள்ளனர். இதனால் நிச்சயம் குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும்’ என தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் 14ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் வரும் 18-ம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News