செய்திகள்
குஜராத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றி பெறுவோம்: மோடி நம்பிக்கை
குஜராத் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாகுப்பதிவு நிறைவடைந்த நிலையில் வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றி பெறுவோம் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.
முதல்கட்டமாக 89 தொகுதிகளில் இன்றுகாலை வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணியளவில் நிறைவடைந்த இன்றைய தேர்தலில் சுமார் 68 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்றைய தேர்தலில் அமோகமாக வாக்களித்த குஜராத் சகோதர-சகோதரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ’குஜராத்தியர்களின் அன்பு மற்றும் ஆதரவுடன் பா.ஜ.க. வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றி பெறும்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று குறிப்பிட்டுள்ளார்.
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.
முதல்கட்டமாக 89 தொகுதிகளில் இன்றுகாலை வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணியளவில் நிறைவடைந்த இன்றைய தேர்தலில் சுமார் 68 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்றைய தேர்தலில் அமோகமாக வாக்களித்த குஜராத் சகோதர-சகோதரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ’குஜராத்தியர்களின் அன்பு மற்றும் ஆதரவுடன் பா.ஜ.க. வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றி பெறும்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று குறிப்பிட்டுள்ளார்.