செய்திகள்
ஜார்கண்ட்டில் நடந்த சாலை விபத்தில் மியான்மர் தூதரக அதிகாரி பலி
ஜார்கண்ட் மாநிலம் நிமியாகாட் பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் இந்தியாவுக்கான மியான்மர் தூதரக தலைமை அதிகாரி யி சோய் பரிதாபமாக உயிரிழந்தார்.
பாட்னா:
இந்தியாவுக்கான மியான்மர் தூதரகம் கொல்கத்தா நகரில் உள்ளது. இதில் தலைமை தூதரக அதிகாரியாக இருப்பவர் யி சோய். இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் கிரிதித் மாவட்டத்தில் உள்ள நிமியாகாட் என்ற பகுதியில் இன்று மதியம் யி சோய் தனது மனைவி மற்றும் இருவருடன் காரில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக கார் எதிரே வந்த லாரி மீது மோதி சாலையில் உருண்டது. இந்த கோர விபத்தில் யி சோய் பரிதாபமாக பலியாகினார். அவரது மனைவி மற்றும் இருவர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், வெளியுறவு அமைச்சகத்திற்கு உரிய தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்தியாவுக்கான மியான்மர் தூதரகம் கொல்கத்தா நகரில் உள்ளது. இதில் தலைமை தூதரக அதிகாரியாக இருப்பவர் யி சோய். இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் கிரிதித் மாவட்டத்தில் உள்ள நிமியாகாட் என்ற பகுதியில் இன்று மதியம் யி சோய் தனது மனைவி மற்றும் இருவருடன் காரில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக கார் எதிரே வந்த லாரி மீது மோதி சாலையில் உருண்டது. இந்த கோர விபத்தில் யி சோய் பரிதாபமாக பலியாகினார். அவரது மனைவி மற்றும் இருவர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், வெளியுறவு அமைச்சகத்திற்கு உரிய தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.