செய்திகள்

மீண்டும் மெர்சலுக்கு ஆதரவாக தமிழில் டுவிட் செய்த ராகுல் காந்தி

Published On 2017-10-21 16:59 GMT   |   Update On 2017-10-21 16:59 GMT
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி மெர்சல் படத்துக்கு ஆதரவாக மீண்டும் தமிழில் டுவிட் செய்துள்ளார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி மெர்சல் படத்துக்கு ஆதரவாக மீண்டும் தமிழில் டுவிட் செய்துள்ளார்.

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தான வசனங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க மேற்கண்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியது.

இதனையடுத்து, மெர்சல் திரைப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிடோர் ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதனால், மெர்சல் விவகாரம் தேசிய அளவில் ட்ரெண்டிங் அடித்து வருகிறது. மேலும், தமிழ் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் மெர்சலுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் மெர்சல் படத்திற்கு ஆதரவாக டுவிட்டரில் காலையில் ஆங்கிலத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மீண்டும் ராகுல் காந்தி மெர்சல் படத்துக்கு ஆதரவாக தனது டுவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
 
இதுதொடர்பாக ராகுல் காந்தி டுவிட்டரில் கூறுகையில், ‘திரு.மோடி அவர்களே, சினிமா என்பது தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் ஆழ்ந்த வெளிப்பாடு. மெர்சல் பட விவகாரத்தில் தலையிட்டு தமிழின் தன்மானத்தை மதிப்பு இறக்கச் செய்யாதீர்கள்’ என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News