search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Film"

    • நீர் தேர்வு அனிதா இறப்பின் போது போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் சினிமா இயக்குனர் கவுதமனுக்கு பிடிவாரண்ட் பிறபபிக்கப்பட்டு உள்ளது
    • பலமுறை வழக்கில் ஆஜராகாததால் நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்

    செந்துறை,

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு காரணமாக மருத்துவர் ஆக முடியாத மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் குழுமூர் கிராமத்திற்கு வந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அனிதாவின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு சுடுகாடு வரை சென்று அஞ்சலி செலுத்தினார். இதனால் இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் எதிரொளித்தது.

    போராட்டத்தில் ஈடுபட்ட சினிமா இயக்குனர் கவுதமன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீது வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்குகள் தற்போது செந்துறை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கவுதமன் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி ஏக்னஸ் ஜெப கிருபா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • தீ கிட் என்று சார்லி சாப்ளின் திரைப்படம் திரையிடப்பட்டு இத்திரைப்படத்தை மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
    • மாணவர்களுக்கு இம்மன்றங்கள் மூலம் சிறார் திரைப்படங்கள் திரையிட்டு நல்ல கருத்தினையும் நல்ல பண்பினையும் எடுத்துரைக்க வழிகாட்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறார் திரைப்படத் திருவிழாவினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி. செழியன், பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் சுதன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:- தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் சிறார் திரைப்பட திருவிழா இன்று தொடங்கப்பட்டு. "தீ கிட்" என்று சார்லி சாப்ளின் திரைப்படம் திரையிடப்பட்டு இத்திரைப்படத்தை மாணவ -மாணவிகள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர் .

    மேலும் தஞ்சாவூர் மாவட்டத்திற்காக தஞ்சை திரைப்படம் மன்றம், பட்டீஸ்வரம் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சார்லி சாப்ளின் திரைப்பட மன்றம், கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்யஜித்ரே திரைப்பட மன்றம், தாராசுரம் வை.கோவிந்தசாமி நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் கே.பாலச்சந்தர் திரைப்பட மன்றம், திப்பிராஜபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பாலு மகேந்திரா திரைப்படம் மன்றம், உடையாளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மணிரத்தினம் திரைப்படம் மன்றம் ஆகிய திரைப்படம் மன்றங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் மாணவ -மாணவிகளுக்கு இம்மன்றங்கள் மூலம் சிறார் திரைப்படங்கள் திரையிட்டு நல்ல கருத்தினையும் நல்ல பண்பினையும் எடுத்துரைக்க வழிகாட்டும்.இஇவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், அன்பழகன் எம்.எல்.ஏ, முதன்மை கல்வி அலுவலர்சிவக்குமார், தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நெஞ்சுக்கு நீதி படம் பார்த்த ரசிகருக்கு குலுக்கல் முறையில் மோட்டார் சைக்கிள் பரிசு வழங்கப்பட்டன.
    • தாயார்தோப்பு கிராமத்தை சேர்ந்த டான்ஆசிர் என்ற வாலிபருக்கு கிடைத்தது.

    வீ. கே.புதூர்:

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நடித்து சமீபத்தில் வெளிவந்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் முதல் காட்சியை கண்டு களித்த ரசிகர்களில் ஒரு நபருக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு மோட்டார் சைக்கிளை வழங்க தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதனை முன்னிட்டு குலுக்கல் முறையில் தேர்வு பெற்ற தாயார்தோப்பு கிராமத்தை சேர்ந்த டான்ஆசிர் என்ற வாலிபருக்கு குற்றாலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது மோட்டார் சைக்கிள் சாவியை தி.மு.க. தேர்தல் நடத்தும் பொறுப்பாளர் பிடிசி.செல்வராஜ், தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் உதயநிதி நற்பணி மன்ற நெல்லை ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் ஈஸ்வரன்,செயலாளர் செல்லத்துரை, துணை செயலாளர் அருணன் சிவபத்மநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், சீனிதுரை மற்றும் விவசாய அணி துணை அமைப்பாளர் சீவநல்லூர் சாமிதுரை,குற்றாலம் பேரூர் கழக செயலாளர் சங்கர் என்ற குட்டி, வல்லம் செல்வம், வீட்டுவசதி தலைவர் குற்றாலம் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    நடிகர் விமல் நடித்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் ஆபாச காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் படத்தை தடை விதிக்க வேண்டும் என மதுரையில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மதுரை:

    அண்மை காலமாக பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் காட்சிகளும், வசனங்களும் இடம் பெறும் வகையில் திரைப் படங்கள் வெளி யாகின. இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண் கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நடிகர் விமல் நடித்த ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ என்ற திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்த படத்தில் ஆபாச காட்சிகளும், பெண்களை கேலி செய்யும் வகையில் வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஆபாச போஸ் டர்கள் நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள் ளன.

    மதுரையில் காளவாச லில் உள்ள சண்முகா சினி காம்ப்ளக்சில் இந்தப் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று காலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டனர். அவர்கள் தியேட்டருக்குள் சென்று அங்கிருந்த போஸ் டர்களை கிழித்தனர்.

    பின்னர் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி தியேட்டர் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு காலை நேர காட்சி ரத்து செய்யப் பட்டது. #tamilnews
    ×