search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சினிமா இயக்குனர் கவுதமனுக்கு பிடிவாரண்ட்
    X

    சினிமா இயக்குனர் கவுதமனுக்கு பிடிவாரண்ட்

    • நீர் தேர்வு அனிதா இறப்பின் போது போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் சினிமா இயக்குனர் கவுதமனுக்கு பிடிவாரண்ட் பிறபபிக்கப்பட்டு உள்ளது
    • பலமுறை வழக்கில் ஆஜராகாததால் நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்

    செந்துறை,

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு காரணமாக மருத்துவர் ஆக முடியாத மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் குழுமூர் கிராமத்திற்கு வந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அனிதாவின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு சுடுகாடு வரை சென்று அஞ்சலி செலுத்தினார். இதனால் இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் எதிரொளித்தது.

    போராட்டத்தில் ஈடுபட்ட சினிமா இயக்குனர் கவுதமன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீது வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்குகள் தற்போது செந்துறை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கவுதமன் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி ஏக்னஸ் ஜெப கிருபா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    Next Story
    ×