என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "spirits"
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், நாகூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது நாகூர் வெட்டாறு பாலம் அருகில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
போலீசார் அவர்களை நிறுத்தி சோதனை செய்யும்போது பாண்டி சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் பனங்குடி சன்னமங்கலம் ஓடை மேடு தெருவை சேர்ந்த ராஜு (வயது 30) அதே பகுதி செவ்வந்தி வீதி தெருவை சேர்ந்த ரஞ்சித் (22) என்பதும் தெரியவந்தது இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்
தொடர்ந்து வாழ ஒக்கூர் பகுதியில் நடத்திய சோதனையில் பாண்டி சாராயம் கடத்தி வந்த திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு தெரு ஆனந்தகுமார் (25) அதே பகுதி பெருக்கு தெருவைச் சேர்ந்த சுமன் (24) ஆகிய 2 பேரையும் கைது செய்து 110 லிட்டர் பாக்கெட் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
பேரையூர்:
மதுரை மாவட்ட தனிப்பிரிவு போலீசார் திருமங்கலம் அருகே உள்ள திரளி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வேகமாக ஒரு கார் வந்தது. அதனை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
காரில் வந்த 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசார் சந்தேகமடைந்தனர். இதனைத் தொடர்ந்து காருக்குள் சோதனை நடத்திய போது எரிசாராயம் கடத்தப்படுவது தெரியவந் தது. காரில் இருந்த 480 எரிசாராய பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் காரில் வந்த கன்னியாகுமரி மாவட்டம் பெரியவிளையைச் சேர்ந்த ராஜாமணி மகன் துளசி (வயது 37), மதுரை கே.புதூர் காளிதாஸ் மகன் கணேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
எரிசாராயம் எங்கு தயாரிக்கப்பட்டது? அதனை எங்கு கடத்துகிறார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியில் இன்று அதிகாலை 4 மணி அளவில் நாமக்கல் மாவட்ட மது விலக்கு பிரிவு கூடுதல் சூப்பிரண்டு செந்தில் மேற்பார்வையில் மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ரகசிய தகவலின் அடிப்படையில் ஆந்திராவில் இருந்து வந்த டேங்கர் லாரி ஒன்றை போலீசார் சோதனை செய்தனர். இந்த லாரியில் 25 லிட்டர் எரிசாராயம் ஐதராபாத்தில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு கடத்திச்செல்வது தெரியவந்தது.
லாரியில் இருந்த டிரைவரை முதலில் பிடித்த போலீசார், தப்பி ஓட முயன்ற கிளீனரையும் மடக்கி பிடித்தனர். எரிசாராயம் கடத்தி வந்த டேங்கர் லாரியை நாமக்கல் மது விலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.
டிரைவர், கிளீனர் ஆகியோரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்