என் மலர்
நீங்கள் தேடியது "கே பாலசந்தர்"
- அதன் பின்னரே ரஜினிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
- திரைப்பட விமர்சகராகவும் இருந்துள்ளார்.
இயக்குனர் கே. பாலச்சந்தர் ரஜினியை சினிமாவில் அறிமுகப்படுத்தியதை அனைவரும் அறிவர். ஆனால் ரஜினியை ஒரு நடிகராக மெருகேற்றியவர் கோபாலி.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பாக நடத்தப்பட்ட, திரைப்படப் பயிற்சி கல்லூரியில் ரஜினி படித்த சமயம், அங்கு நடிப்பு பயிற்சி கற்றுக்கொடுக்கின்ற ஆசிரியராக கோபாலி பணியாற்றினார்.
கே.பாலச்சந்தர் திரைப்பட பயிற்சிக் கல்லூரிக்கு வந்த போது தனது மாணவர் ரஜினியை கோபாலி அவருக்கு அறிமுகப்படுத்தினார். அதன் பின்னரே ரஜினிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
கோபாலி, இந்தியன் எக்ஸ்பிரஸ், தூர்தர்ஷன் ஆகியவற்றிலும் பணியாற்றி உள்ளார். மேலும் திரைப்பட விமர்சகராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் வயது மூப்பு காரணமாக கோபாலி சென்னையில் இன்று காலை காலமானார். ரஜினிகாந்த் நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து இறுதிமதியாதை செலுத்தினார்.
- தமிழ் சினிமாவின் ஆளுமையாக விளங்கியவர் இயக்குனர் கே.பாலசந்தர்.
- இவர் இயக்கிய படங்கள் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமாக்களின் ஆளுமையாக விளங்கியவர் இயக்குனர் கே.பாலசந்தர். இவர் நினைவாக சென்னையில் நினைவு சதுக்கம் ஒன்று அமைக்க சென்னை மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இதில் 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. அதில் மறைந்த பிரபல இயக்குனர் கே.பாலசந்தர் நினைவாக மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் காவிரி மருத்துவமனை அருகில் ஆயிரம் சதுரடி அளவில் உள்ள போக்குவரத்து இடத்திற்கு கே.பாலசந்தர் சதுக்கம் அல்லது கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு என பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பு சென்னை மாநகராட்சி மூலமாக அவ்வை சண்முகம் சாலைக்கு வி.பி.ராமன் பெயரும் மந்தைவெளி மேற்கு வட்ட சாலைக்கு மறைந்த பிரபல பாடகர் டி.எம்.சவுந்தர ராஜன் பெயரும் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கலையுலகில் நீங்காப் புகழுக்கு சொந்தக்காரர்.
- திரையுலகில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பங்காற்றி வந்தவர்.
தமிழ் திரையுலகில் தனது புதுமையான படைப்புகள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது மாபெரும் ஆளுமைகளாக இருக்கும் பல்வேறு நட்சத்திரங்களை அடையாளம் கண்டவர். கலையுலகில் நீங்காப் புகழுக்கு சொந்தக்காரர். இயக்குநர் கே.பாலச்சந்தரின் பிறந்த நாள் இன்று.
திரையுலகில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பங்காற்றி வந்தவர். கே.பி. என்றும் இயக்குநர் சிகரம் என்றும் அழைக்கப்பட்டார். 1930-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி பிறந்த கே. பாலச்சந்தர் 2014-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி உயிரிழந்தார். அவர் மறைந்தாலும் அவரது படைப்புகளும், அவர் உருவாக்கிய நட்சத்திரங்களும் இன்றும் அவரின் திரை ஆளுமைக்கு சாட்சியாக விளங்குகின்றன.

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் கே.பாலசந்தர் பிறந்தநாளை ஒட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான பதிவில், "Thank you #KBSir. இன்று அவரது பிறந்த நாள். அவர் புகழ் ஓங்குக!" என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






