செய்திகள்

உ.பி.: 5 பேரால் கற்பழிக்கப்பட்ட சிறுமி மிரட்டலுக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை

Published On 2017-10-15 12:07 GMT   |   Update On 2017-10-15 12:07 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கூட்டாக கற்பழித்தவர்களின் மிரட்டலுக்கு பயந்து 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்பட் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற ஐந்துபேர் கூட்டாக சேர்ந்து கற்பழித்ததாக அவளது பெற்றோர் 4 மாதங்களுக்கு முன்னர் ரமலா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குஇப்பதிவு செய்த போலீசார் குற்றம்சாட்டப்பட்ட சோனு,மோனு,ரோஹித்,சாகர்,பப்பு ஆகியோரை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

போலீஸ் காவலில் இருந்து வெளியே வந்தவர்கள் அந்த சிறுமியை தொடர்ந்து மிரட்டி வந்ததால் மன உளைச்சலுக்கு உள்ளான அந்தப் பெண் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள். இந்த சம்பவத்தை வெறும் தற்கொலை என்று வழக்குப்பதிவு செய்த போலீசார் மீது மாவட்ட சூப்பிரண்ட் நடவடிக்கை எடுத்து இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்துள்ளார்.

தற்போது, பழைய கற்பழிப்பு வழக்குடன் சிறுமியின் மரணம் தொடர்பான வழக்கையும் இணைத்து விசாரிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News