search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் வழக்குப்பதிவு"

    • பஸ் நிறுத்தம் அருகே உள்ள வேகத்தடையில் அந்த பஸ் மெதுவாக சென்றது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆறுமுகநேரி:

    நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் அரசு பஸ் இன்று காலை காயல்பட்டினத்தை கடந்து ஆறுமுகநேரியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

    பேயன்விளை பஸ் நிறுத்தம் அருகே உள்ள வேகத்தடையில் அந்த பஸ் மெதுவாக சென்றது. அப்போது அங்கு தாயுடன் நின்றிருந்த ஒரு சிறுமி பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது கல்லை வீசி எறிந்துள்ளார்.

    இதில் கண்ணாடி முழுவதுமாக உடைந்து சிதறியது. இதுபற்றி அந்த பஸ் கண்டக்டர் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து முசரவாக்கம் காலனியை சேர்ந்த தொழிலாளியான சீராளன் என்பவரை கைது செய்தனர்.
    • சீராளன் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

    காஞ்சிபுரம்:

    பாலுசெட்டி சத்திரம் அருகே உள்ள திருப்புட்குழி பகுதியை சேர்ந்தவர் கண்ணியப்பன். இவரது மனைவி பார்வதி (வயது66). கடந்த 7.12.2018-ம் ஆண்டு திருப்புட்குழி ஏரிக்கரை அருகில் உள்ள நிலத்தில் பார்வதி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முசரவாக்கம் காலனியை சேர்ந்த தொழிலாளியான சீராளன் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி எழிலரசி தீர்ப்பு அளித்தார். அதில், சீராளன் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

    • சமூக வலைதளத்தில் பழகி துணிகரம்
    • இ-மெயில் முகவரி மற்றும் போன் எண்ணை வைத்து விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்த திருமணமான 36 வயது பெண்ணுக்கும், திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    அந்த நபர் தனது பெயரை பிரகதீஷ் என பதிவிட்டிருந்தார்.

    இதையடுத்து பிரகதீஷை அந்த பெண் தனது வீட்டிற்கு அழைத்து உள்ளார். இதையடுத்து அவர் நேற்று முன்தினம் பெண்ணின் வீட்டிற்கு சென்று பேசிக்கொண்டு இருந்தார்.

    அப்போது பிரகதீசை அந்த பெண் அணிந்து இருந்த நகைகள் தங்கமா என விசாரித்து உள்ளார். அந்த பெண் தனது தாலி மட்டும் தங்கம் என கூறியுள்ளார்.

    இதையடுத்து திடீரென பிரகதீஷ், பெண்ணின் கழுத்தில் இருந்த 3 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து பெண் அளித்த புகாரின்பேரில் குரிசிலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற வாலிபர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த இ-மெயில் முகவரி மற்றும் போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து திண்டுகல் மாவட்டத்தை சேர்ந்த பிரகதீஷ்வரனை போலீசார் ைகது செய்தனர்.

    • பைக் 6 வழிச்சாலை தடுப்புச்சுவரில் மோதியது
    • தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார்

    வேலூர்:

    வேலூர் அடுத்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்தவர் விக்கி என்கிற ரோகித்ராஜ் (வயது 19). 10-ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர் விடுதலை படத்தில் போலீஸ்காரராக நடித்து இருந்தார்.

    இந்தநிலையில் நேற்றிரவு நண்பர்களை பார்ப்பத ற்காக வேலூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். வேலூர் நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் வரும்போது அந்தவழியாக வந்த கார் பைக் மீது மோதியது.

    இதில் கட்டுப்பாட்டை இழந்த ரோகித்ராஜ் ஓட்டிச் சென்ற பைக், அங்குள்ள 6 வழிச்சாலை தடுப்புச்சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் ரோகி த்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விளையாடிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆலங்காயம்:

    ஆலங்காயத்தை அடுத்த நிம்மியம் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகன் யோகன்ராவ் (வயது 2). இந்த குழந்தையை குளிக்க வைப்பதற்காக கடந்த 7-ந்தேதி வெந்நீர் வைத்திருந்தனர்.

    அப்போது அங்கு விளையாடிய குழந்தை யோகன்ராவ் பாத்திரத்தை இழுத்ததில் வெந்நீர் கொட்டி படுகாயமடைந்தது.

    உடனடியாக சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியல் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டது. இதுகுறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடைக்கு சென்றுவிட்டு திரும்பிவந்து பார்த்தபோது அதிர்ச்சி
    • மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த பெரியப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன், அரிசி வியாபாரி. இவர் தனது பைக்கில் சி.என்.ஏ. சாலையில் உள்ள தனியார் வங்கிக்கு சென்றார். அங்கு தனது கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் எடுத்தார்.

    அந்த பணத்தை தனது பைக்கில் வைத்துக்கொண்டு புறப்பட்டார். ஆற்றுமேடு பகுதியில் பைக்கை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றுள்ளார்.

    பின்னர் சிறிதுநேரம் கழித்து வெளியே வந்து பார்த்த போது பைக்கில் வைத்திருந்த ரூ.3 லட்சத்தை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

    • நாய் குறுக்கே வந்ததால் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் சின்னகுலமாரி யம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாதவன் (வயது 43). எலக்ட்ரீசியன். இவருக்கு இன் னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 17-ந் தேதி மாதவன் வேலை தொடர்பாக மோட் டார்சைக்கிளில் திருப்பத்தூ ரில் இருந்து திருவண்ணா மலை செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது வெங்கடேஸ் வரா நகர் அருகே சாலையின் குறுக்கே திடீரென நாய் வந்தது. இதையடுத்து மாதவன் நாய் மீது மோதாமல் இருக்க வண்டியை திருப்பியபோது மோட்டார்சைக்கிள் கட்டுப் பாட்டை இழந்து, அவர் சாலையில் விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். பின்னர் மேல்சிகிச்சைக் காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
    • செல்வபிரகாசம் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக மாங்காடு போலீசில் புகார் அளித்தார்.

    பூந்தமல்லி:

    மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வ பிரகாசம். இவரது மனைவி லாவண்யா. இவர்களது மகன் சர்வேஸ்வரன் (வயது 2½). கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதைத்தொடர்ந்து மனைவி லாவண்யாவை பிரிந்து செல்வபிரகாசம் தனியாக சென்று விட்டார். இதனால் லாவண்யா, தனது மகன் சர்வேஸ்வரனுடன் தனியாக வசித்தார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் மகன் சர்வேஸ்வரன் தவறி கிழே விழுந்ததில் தலையில் காயம் அடைந்து இறந்து விட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சர்வேஸ்வரன் உடல் அதே பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் இதுபற்றி லாவண்யா தனது கணவர் செல்வபிரகாசத்துக்கு தகவல் தெரிவிக்க வில்லை.

    இதற்கிடையே செல்வ பிரகாசம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகனை பார்க்க சென்றபோது அவன் இறந்து இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் லாவண்யாவின் நடவடிக்கை குறித்து அக்கம் பக்கத்தினர் சந்தேகம் தெரிவித்தனர்.

    இதையடுத்து செல்வபிரகாசம் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக மாங்காடு போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கள்ளக்காதல், உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் லாவண்யா, அவரது கள்ளக்காதலனான அதே பகுதியை சேர்ந்த மணிகண்டனுடன் சேர்ந்து குழந்தை சர்வேஸ்வரணை அடித்து கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    மேலும் கொலையை மறைக்க அவன் தவறி கிழே விழுந்ததில் இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இதனால் ஆரம்பத்தில் லாவண்யாவின் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. அவரும் மகன் சாவில் சோகத்தில் இருப்பது போல் நடித்து வந்தார்.

    ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையின் போது லாவண்யா தனது மகனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து நாடகமாடியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து லாவண்யா, அவரது கள்ளக்காதலன் மணிகண்டன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கணவர் பிரிந்து சென்ற பின்னர் வீட்டின் அருகே வசித்த மணிகண்டனுடன் லாவண்யாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் கணவன், மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அவர்களின் உல்லாச சந்திப்பிற்கு இடையூறாக குழந்தை சர்வேஸ்வரன் இருந்தான்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், குழந்தை சர்வேஸ்வரன் உடலில் கடித்து வைத்து உள்ளார். மேலும் இருவரும் தொடர்நது குழந்தை சர்வஸே்வரனை அடித்து உதைத்து கொடுமை படுத்தி உள்ளனர்.

    இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளியதில் குழந்தை சர்வேஸ்வரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்து விட்டான். இது வெளியே தெரிந்தால் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்து லாவண்யா நாடகமாடியது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனை தாயே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மர்ம கும்பல் கைவரிசை
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே உள்ள செங்கலி குப்பம் ஊராட்சியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 41) .

    இவரது மனைவி அறிவுக்கொடி (37). 2 பேரும் தனியார் ஷூ கம்பெனியில் தொழிலா ளியாக வேலை செய்து வருகின்றனர்.

    கணவன்- மனைவி 2 பேரும் வழக்கம்போல் நேற்று காலை வேலைக்கு சென்றனர். பின்னர் வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்துபார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 4 பவுன் தங்கநகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து லட்சுமணன் கொடுத்த புகாரின் பேரில் ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
    • கடந்த ஒரு மாதத்திற்கு முன்பும் ஏசுதாசனுக்கும், அன்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    ஆரல்வாய்மொழி:

    ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன் (வயது 58). இவர் அந்த பகுதியில் செங்கல் சூளை வைத்துள்ளார். நேற்று இரவு ஏசுதாசன் செங்கல் சூளையிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

    ஆரல்வாய்மொழி பகுதியில் வந்து கொண்டிருந்த போது 4 பேர் கொண்ட கும்பல் ஏசுதாசனை வழி மறித்து கத்தியால் சரமாரியாக குத்தியது. இதில் ஏசுதாசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. ரத்தவெள்ளத்தில் கிடந்த ஏசுதாசனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஏசுதாசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை மேற் கொண்டனர். ஏசுதாசன் மனைவி ஜெயா கொடுத்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி கிறிஸ்துநகரை சேர்ந்த அன்பு என்ற அன்பழகன், விஜயன், திருப்பதிசாரத்தை சேர்ந்த மணிகண்டன், ஆரல்வாய்மொழி மிஷின் காம்பவுண்டை சேர்ந்த தங்க ஜோஸ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கொலை செய்யப்பட்ட ஏசுதாசன் அதே பகுதியை சேர்ந்த அன்புவின் உறவுக்கார பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். பின்னர் அவரை தூத்துக்குடிக்கு அழைத்து சென்று தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை இங்கு அழைத்து வந்தார். இதனால் அன்புவிற்கும், ஏசுதாசனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பும் ஏசுதாசனுக்கும், அன்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆரல்வாய் மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தான் அன்பு பழிக்கு பழியாக ஏசுதாசனை தீர்த்து கட்டியது தெரிய வந்துள்ளது.

    கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் தேடுவதை அறிந்த 4 பேரும் தலைமறைவாகிவிட்டனர்.

    இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட ஏசுதாசனின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு உள்ளனர்.

    • காயத்ரி ரகுராம் சென்னை ‘சைபர் கிரைம்' போலீசாருக்கு ‘ஆன்லைன்' வழியாக புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார்.
    • பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாபு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க.வில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் சென்னை 'சைபர் கிரைம்' போலீசாருக்கு 'ஆன்லைன்' வழியாக புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார்.

    அதில் அவர், ராணிப்பேட்டை மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாபு தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை பரப்பி வருகிறார். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.

    அவருடைய புகார் மனுவை 'சைபர் கிரைம்' போலீசார் ஆராய்ந்தனர்.

    இந்த நிலையில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாபு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவர் மீது விரைவில் கைது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.

    • நாகம்மாள் உடல் நிலை சரியில்லாமல் இருந்தார்
    • மினிடெம்போ எதிர்பாராதவிதமாக நாகம்மாள் மீது மோதியது

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி நாகம்மாள் (வயது 87). உடல் நிலை சரியில்லாமல் இருந்த இவர் இன்று காலை பாரதி நகர் விநாயகர் கோவில் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மினிடெம்போ எதிர்பாராதவிதமாக நாகம்மாள் மீது மோதியது. இதில் படுகா யம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே நாகம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய ஓமலூர் அருகே உள்ள கோட்ட கவுண்டம்பட்டியைச் சேர்ந்த வேன் டிரைவர் ராம்கி (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×