search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் சரக்கு வேன் மோதி மூதாட்டி சாவு
    X

    சேலத்தில் சரக்கு வேன் மோதி மூதாட்டி சாவு

    • நாகம்மாள் உடல் நிலை சரியில்லாமல் இருந்தார்
    • மினிடெம்போ எதிர்பாராதவிதமாக நாகம்மாள் மீது மோதியது

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி நாகம்மாள் (வயது 87). உடல் நிலை சரியில்லாமல் இருந்த இவர் இன்று காலை பாரதி நகர் விநாயகர் கோவில் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மினிடெம்போ எதிர்பாராதவிதமாக நாகம்மாள் மீது மோதியது. இதில் படுகா யம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே நாகம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய ஓமலூர் அருகே உள்ள கோட்ட கவுண்டம்பட்டியைச் சேர்ந்த வேன் டிரைவர் ராம்கி (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×