செய்திகள்
தெலுங்கானா: அரசு பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 6 பேர் பலி
தெலுங்கானா மாநிலம் சூர்யபேட்டையில் அரசு பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 6 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சூர்யப்பேட்டை மாவட்டத்தில் விஜயவாடாவில் இருந்து ஐதராபாத் செல்லும் அரசு பேருந்து இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அதில் 36-க்கு மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். முனகலா காவல் நிலைய எல்லையில் வந்த போது திடீரென அரசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பஸ் டிரைவர் மற்றும் ஒரு பெண் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சூர்யப்பேட்டை மாவட்டத்தில் விஜயவாடாவில் இருந்து ஐதராபாத் செல்லும் அரசு பேருந்து இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அதில் 36-க்கு மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். முனகலா காவல் நிலைய எல்லையில் வந்த போது திடீரென அரசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பஸ் டிரைவர் மற்றும் ஒரு பெண் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.