செய்திகள்
திருவனந்தபுரம் அருகே கார் மோதி கல்லூரி மாணவி பலி: 5 மாணவர்கள் கைது
திருவனந்தபுரம் அருகே கார் மோதி கல்லூரி மாணவி பலியான சம்பவத்தில் 5 மாணவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வர்க்கலை அருகே உள்ள கடைக்காவூரை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் மீரா (வயது24).
மீரா வர்க்கலை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ படித்து வந்தார். இவர் தினமும் கல்லூரிக்கு வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் சென்றுவருவது வழக்கம்.
இந்த நிலையில் மீரா தனது ஸ்கூட்டரில் கல்லூரிக்கு சென்றுகொண்டு இருந்தார். வர்க்கலை சாவர்கோடு சந்திப்பு அருகே காலையில் அவர் சென்றபோது அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
அப்போது எதிரே வேகமாக வந்த கார் ஒன்று மீராவின் ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் மீரா தூக்கி வீசப்பட்டார். சாலையில் ரத்தவெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடினார். உடனடியாக பொது மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் மாணவி மீராவை ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மீரா பரிதாபமாக இறந்து விட்டார். விபத்து நடந்ததும் அந்த கார் நிற்காமல் சென்று விட்டது.
இந்த விபத்து பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீஸ் விசாரணையில் மாணவி மீரா மீது மோதிய கார் சிக்கியது. அந்த காரை மீரா படித்த அதே கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஒருவர் ஓட்டி வந்ததும் தெரிய வந்தது.
இதுபற்றி அந்த மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவருடன் அந்த காரில் மேலும் சில மாணவர்களும் பயணம் செய்தது தெரியவந்தது. அவர்களிட மும் போலீசார் விசாரித்தனர். அதன்பிறகு இந்த விபத்து தொடர்பாக காரை ஓட்டிய மாணவர் மற்றும் அவரது நண்பர்கள் ஆகிய 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மாணவி மீராவின் ஸ்கூட்டர் மீது கார் மோதியது எதிர்பாராமல் நடந்த விபத்தா? அல்லது வேண்டுமென்றே மோதினார்களா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது. அப்படி என்றால் அதற்கு பின்னணியில் உள்ள காரணம் என்ன? என்பது பற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாணவி மீரா மரணம் அடைந்த தகவல் கிடைத்ததும் அவரது சக தோழிகள் சோகத்தில் ஆழ்ந்தனர். அவரது வீட்டிற்கு சென்று மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
கேரள மாநிலம் வர்க்கலை அருகே உள்ள கடைக்காவூரை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் மீரா (வயது24).
மீரா வர்க்கலை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ படித்து வந்தார். இவர் தினமும் கல்லூரிக்கு வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் சென்றுவருவது வழக்கம்.
இந்த நிலையில் மீரா தனது ஸ்கூட்டரில் கல்லூரிக்கு சென்றுகொண்டு இருந்தார். வர்க்கலை சாவர்கோடு சந்திப்பு அருகே காலையில் அவர் சென்றபோது அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
அப்போது எதிரே வேகமாக வந்த கார் ஒன்று மீராவின் ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் மீரா தூக்கி வீசப்பட்டார். சாலையில் ரத்தவெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடினார். உடனடியாக பொது மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் மாணவி மீராவை ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மீரா பரிதாபமாக இறந்து விட்டார். விபத்து நடந்ததும் அந்த கார் நிற்காமல் சென்று விட்டது.
இந்த விபத்து பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீஸ் விசாரணையில் மாணவி மீரா மீது மோதிய கார் சிக்கியது. அந்த காரை மீரா படித்த அதே கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஒருவர் ஓட்டி வந்ததும் தெரிய வந்தது.
இதுபற்றி அந்த மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவருடன் அந்த காரில் மேலும் சில மாணவர்களும் பயணம் செய்தது தெரியவந்தது. அவர்களிட மும் போலீசார் விசாரித்தனர். அதன்பிறகு இந்த விபத்து தொடர்பாக காரை ஓட்டிய மாணவர் மற்றும் அவரது நண்பர்கள் ஆகிய 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மாணவி மீராவின் ஸ்கூட்டர் மீது கார் மோதியது எதிர்பாராமல் நடந்த விபத்தா? அல்லது வேண்டுமென்றே மோதினார்களா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது. அப்படி என்றால் அதற்கு பின்னணியில் உள்ள காரணம் என்ன? என்பது பற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாணவி மீரா மரணம் அடைந்த தகவல் கிடைத்ததும் அவரது சக தோழிகள் சோகத்தில் ஆழ்ந்தனர். அவரது வீட்டிற்கு சென்று மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.