செய்திகள்
திருமண விழாவில் பரிதாபம்: பொய் கூரை இடிந்து விழுந்து 9 பேர் பரிதாப பலி
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற திருமண விழா சடங்கின்போது அலங்காரத்துக்காக அமைக்கப்பட்டிருந்த பொய் கூரை இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற திருமண விழா சடங்கின்போது அலங்காரத்துக்காக அமைக்கப்பட்டிருந்த பொய் கூரை இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள பிதி கிராமத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஒரு திருமண விழாவில் ஏராளமான நண்பர்களும் உறவினர்களும் பங்கேற்றிருந்தனர். மணவிழாவுக்கு முன்னதாக சில சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்தபோது விழா பந்தலில் அலங்காரத்துக்காக அமைக்கப்பட்டிருந்த பொய் கூரை திடீரென்று இடிந்து பார்வையாளர்கள் மீது விழுந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 15 பேரை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். அவர்களில் சிலர் போகும் வழியிலும், சிலர் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர். இன்று காலை நிலவரப்படி 9 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் சிலர் அபாயகட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குமேர் பகுதி போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற திருமண விழா சடங்கின்போது அலங்காரத்துக்காக அமைக்கப்பட்டிருந்த பொய் கூரை இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள பிதி கிராமத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஒரு திருமண விழாவில் ஏராளமான நண்பர்களும் உறவினர்களும் பங்கேற்றிருந்தனர். மணவிழாவுக்கு முன்னதாக சில சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்தபோது விழா பந்தலில் அலங்காரத்துக்காக அமைக்கப்பட்டிருந்த பொய் கூரை திடீரென்று இடிந்து பார்வையாளர்கள் மீது விழுந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 15 பேரை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். அவர்களில் சிலர் போகும் வழியிலும், சிலர் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர். இன்று காலை நிலவரப்படி 9 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் சிலர் அபாயகட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குமேர் பகுதி போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.