கதம்பம்

கங்கை கொண்ட சோழபுர அதிசயம்

Published On 2022-06-18 10:58 GMT   |   Update On 2022-06-18 10:58 GMT
  • கல்வெட்டுகளில் ‘சந்திரகாந்தக்கல்’ என்று குறிப்பிடப்படும் ஒருவகைக் கற்களால் கட்டியதால்தான் இந்தக் குளிர்ச்சி நிலை என்று கூறப்பட்டுள்ளது.
  • தொழிற்நுட்பத்தில் பழந்தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பறைசாற்றுகிறது.

கங்கைகொண்ட சோழீசுவரர் கோவில் கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊரில் முதலாம் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது.

கங்கை ஆறு வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக, கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரத்தை முதலாம் இராசேந்திரன் அமைத்து அங்கு இக்கோவிலையும் கட்டினார்.

1000 ஆண்டுகளுக்கு முன்பே கட்டிய இக்கோவிலின் கர்ப்பக் கிரகத்திற்குள் சென்று பார்த்தால், அதன் உட்புறச் சுவர்கள் எல்லாவற்றிலுமிருந்து தண்ணீர், வியர்வைபோல முத்து முத்தாய், வடிவதைக் காணலாம். கர்ப்பக்கிரகம் 10 டன் A/c போட்டது போன்று குளுமையாக இருக்கும். கடும் கோடையில்கூட அந்தக் குளிர்ச்சி மாறாது. இன்றுவரை குளிர்ச்சியாகவே இருக்கிறது.

கல்வெட்டுகளில் 'சந்திரகாந்தக்கல்' என்று குறிப்பிடப்படும் ஒருவகைக் கற்களால் கட்டியதால்தான் இந்தக் குளிர்ச்சி நிலை என்று கூறப்பட்டுள்ளது. தொழிற்நுட்பத்தில் பழந்தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பறைசாற்றுகிறது.

-ப்யாரிப்ரியன்

Tags:    

Similar News

தம்பிடி