கதம்பம்

மகத்துவம் மிக்க வெட்டிவேர்

Published On 2024-04-03 11:21 GMT   |   Update On 2024-04-03 11:21 GMT
  • வெட்டி வேர் சிறந்த வாசனை திரவியம் தயாரிக்கும் பொருளாகவும் பயன்படுகிறது.
  • மண் அரிப்பைத் தடுக்கவும், நீரின் கடினத் தன்மையை குறைக்கவும் வெட்டிவேர் பயன்படுத்தப்படுகிறது.

வெட்டி வேர் என்றால் எல்லாருக்கும் தெரியும். ஆனால் அதன் பயன்கள் பற்றி பலபேருக்குத் தெரியாது.

அந்த காலங்களில் நம்முடைய தாத்தா, பாட்டி வீடுகளில் ஒரு மண்பானையில் தண்ணீர் நிரப்பி, அதில் வெட்டி வேர், விளாமிச்சை வேர் முதலியவற்றை அந்த மண்பானையில் போட்டு தண்ணீர் குடிப்பார்கள். இதன் மூலம் உடல் சூடு குறையும் என்று அறிந்தே இந்த முறையை பின்பற்றி வந்தார்கள்.

கோடை காலத்தில் வெட்டி வேரைக் கொண்டு செய்யப்படும் தட்டிகளை வாங்கி ஜன்னல்களில் கட்டினால் அறையின் வெப்பத்தைக் குறைத்து உடலுக்கு குளிர்ச்சி தரும். மேலும் அந்த தட்டிகளில் நீர் தெளித்து, அதன் மூலம் உருவாகும் வாசனை காற்றை சுவாசிப்பதால் மன அமைதி ஏற்படுகிறது.

கோடைகாலத்தில் வெட்டிவேரை குடிநீரில் போட்டு குடித்து வந்தால் உடல் சூட்டை குறைத்து, அதிக தாகம் எடுப்பதை தடுக்கும்.

வெட்டி வேர், விலாமிச்சை வேர், பாசிப்பயிறு, சந்தனம் இவற்றை பொடியாக்கி பன்னீர் அல்லது தண்ணீரில் கலந்து தடவி வந்தால் வெயில் காலத்தில் காணும் வேர்க்குரு மறையும்.

சிலருக்கு தோள்பட்டை மற்றும் முதுகுப் புறங்களில் பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். சில ஆண்களுக்கு உடலில் வரி வரியாக இருக்கும். இந்த இரு பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வாக வெட்டி வேரை பயன்படுத்தலாம்.

பச்சைப்பயறு, சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து உடலுக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் இந்த பிரச்சனை குணமாகும்.

வெட்டி வேர் சிறந்த வாசனை திரவியம் தயாரிக்கும் பொருளாகவும் பயன்படுகிறது. மண் அரிப்பைத் தடுக்கவும், நீரின் கடினத் தன்மையை குறைக்கவும் வெட்டிவேர் பயன்படுத்தப்படுகிறது.

-கவி மரபு வைத்தியம்

Tags:    

Similar News

தம்பிடி