உள்ளூர் செய்திகள்

சீதபற்பநல்லூரில் பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2022-07-27 09:48 GMT   |   Update On 2022-07-27 09:48 GMT
  • நெல்லையை அடுத்த சீதபற்பநல்லூர் அருகே உள்ள புதூர் கவிராயர் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ்.
  • தற்கொலை தொடர்பாக சீதபற்பநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நெல்லை:

நெல்லையை அடுத்த சீதபற்பநல்லூர் அருகே உள்ள புதூர் கவிராயர் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ்.

இவரது மனைவி முப்புடாதி(வயது 48). இவரது குழந்தை சமீபத்தில் உடல்நலக்குறைவால் இறந்து விட்டது. இதனால் முப்புடாதி மனமுடைந்து காணப்பட்டு உள்ளார்.

மேலும் அவருக்கு உடல்நிலை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அவர் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக சீதபற்பநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News