உள்ளூர் செய்திகள்
அவினாசியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
- பல்லடம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
அவினாசி :
அவினாசி மதுவிலக்கு போலீசாருக்கு பல்லடம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மதுவிலக்கு போலீசார் பல்லடம் அருள்புரம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு மளிகை கடை அருகே சந்தேகப்படும் படி நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜெகபந்து தாஸ் (வயது34) என்பதும் அவர் 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
அவர் மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.