தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கும் 'கூகுள்' அதிகாரிகள்

Published On 2024-05-23 10:26 GMT   |   Update On 2024-05-23 10:26 GMT
  • சென்னைக்கு அருகில் கூகுள் பிக்சல் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாகும் பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
  • தகவல் தொழில்நுட்பத்துறையில் உயர்கல்வி பெற்றுள்ள தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

சென்னை:

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் தொழிற்சாலை தமிழகத்தில் முதல் முறையாக அமைகிறது. கூகுள் நிறுவன அதிகாரிகள் தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் பிக்சல் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க முன் வந்துள்ளார்கள்.

சென்னைக்கு அருகில் கூகுள் பிக்சல் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாகும் பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சென்னைக்கு வர உள்ளனர்.

தகவல் தொழில்நுட்பத்துறையில் உயர்கல்வி பெற்றுள்ள தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டினுடைய பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News