உள்ளூர் செய்திகள்

சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை படத்தில் காணலாம்.

பல்லடத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

Published On 2022-07-29 11:59 GMT   |   Update On 2022-07-29 11:59 GMT
  • குடிநீர் இணைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • குடிநீர் இணைப்பு இல்லாத காரணத்தால் ஆர்.ஓ.வாட்டர் விநியோகிக்கப்படுகிறது.

பல்லடம் :

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பணிக்கம்பட்டி பஞ்சாயத்தை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் இணைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி இன்று காலை செட்டிப்பாளையம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது .

அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கடந்த 6 வருடங்களுக்கு முன்பு வரை குடிநீர் இணைப்பிற்காக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளுக்கு 3 மடங்கு பணத்தை முறைகேடாக பெற்றுக்கொண்டு தற்போது வரை இணைப்பு வழங்காமல் மீண்டும் பணம் செலுத்த கூறுகின்றனர். தொடர்ந்து இப்பகுதியில் குடிநீர் இணைப்பு இல்லாத காரணத்தால் ஆர்.ஓ. வாட்டர் விநியோகிக்கப்படுகிறது. இதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.எனவே குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதையடுத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

Tags:    

Similar News