search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road block"

    • அரசு தேர்வுகள் நடைபெறுவதால் போக்குவரத்து வேறு பாதையில் மாற்றி விடப்பட்டது.
    • ஊராட்சி செயலாளர் அம்மாசை ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள மூணாம்பள்ளி இந்திரநகர் பகுதியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- இப்பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு போதிய அளவுமயான வசதி இல்லை. மேலும் சிலர் மயான பகுதியை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர். அந்த கட்டிடங்களை இடித்து மயானத்திற்கு பாதை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், இப்பகுதியில் 4 சாலைகள் சந்திப்பதால் அடிக்கடி விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்படுவதால் 4 சாலைகளிலும் வேகத்தடை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், இரு பகுதிகளிலும் நிழற்குடை அமைத்து தர வேண்டும் எனவும், முறையாக குடிநீர் விநியோகம் இல்லை என்பதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா, வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜ், வருவாய்த்துறை அலுவலர்கள், கோசணம் ஊராட்சி செயலாளர் அம்மாசை ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் 7 நாட்களுக்குள் உங்களுக்கு தீர்வு ஏற்படுத்தி தருகிறோம் என உறுதி கூறியதன் அடிப்படையில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் கோபி நம்பியூர் சாலையில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அரசு தேர்வுகள் நடைபெறுவதால் போக்குவரத்து வேறு பாதையில் மாற்றி விடப்பட்டது.

    • சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
    • மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதில் குத்தியாலத்தூர் பஞ்சாயத்து மற்றும் திங்களூர் பஞ்சாயத்தை கொண்டு கடம்பூர் பகுதியை இரண்டாகப் பிரித்து கிராமங்கள் 2 பஞ்சாயத்துகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    இந்நிலையில் திங்களூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரியூர் எனும் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த ஒன்றறை மாதமாக குடிநீர் வரவில்லை. இதனால் இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் குடிநீருக்காக பல கிலோமீட்டர் தொலைவு சென்று வருகின்றனர்.

    இதுகுறித்து இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இதுதொடர்பாக கடந்த மாதம் நடந்த கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முறையான குடிநீர் வழங்க வலியுறுத்தப்பட்டது. ஆனாலும் தற்போது வரை குடிநீர் வழங்கப்படவில்லை.

    இந்நிலையில் இன்று காலை கதுபஸ்வண்ணபுரம் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் திரண்டு வந்து சத்தியமங்கலத்தில் இருந்து தேர்மாளம் செல்லும் அரசு பஸ்சை சிறைபிடித்து திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து கடம்பூர் போலீசார் மற்றும் திங்களூர் பஞ்சாயத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் பஞ்சாயத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து உங்கள் பகுதியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை ஏற்று மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டதாக கருதிய ஒற்றை யானை மீண்டும் ஊருக்குள் சுற்றி திரிந்து கொண்டிருந்தது.
    • இருவேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் காட்டிலிருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை நேற்று முன்தினம் ஊருக்குள் புகுந்து தேர்பேட்டை டி.ஜி தொட்டி பகுதியில் குடியிருப்பு தெருக்களில் வழியாக உலா வந்தது.

    இதை பார்த்த மக்கள் பதறியடித்துக்கொண்டு வீட்டுக்குள் ஒளிந்து கொண்டனர். இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே தேன்கனிக்கோட்டை வன ஊழியர்கள் விரைந்து வந்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானையை பட்டாசு வெடித்தும் தாரை தப்பட்டை அடித்தும் அதிக ஒலி எழுப்பியும் காட்டுப் பகுதிக்கு விரட்டியடித்தனர்.

    இதனால் ஒற்றை யானை வனப்பகுதிக்கு சென்றதாக நினைத்து கொண்ட தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமத்தில் பொதுமக்கள் வழக்கம் போல் காலையில் எழுந்து தோட்ட வேலையில் ஈடுபட்டு வந்தனர்.

    தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அன்னியாளம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி வசந்தம்மா (வயது33) கூலித்தொழிலாளியான இவர் இன்று அதிகாலை தோட்ட வேலைக்கு செல்வதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்தார்.

    அப்போது அங்கு வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டதாக கருதிய ஒற்றை யானை மீண்டும் ஊருக்குள் சுற்றி திரிந்து கொண்டிருந்தது.

    இதனை கண்ட வசந்தம்மா அங்கிருந்து தப்பி ஒட முயன்றார். இதனை கண்ட அந்த ஒற்றை யானை வசந்தம்மா தூக்கி வீசி தாக்கியது. இதில் ரத்த வெள்ளத்தில் வசந்தம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த யானையை விரட்டியடித்தனர்.

    இதைத்தொடர்ந்து அந்த ஒற்றை யானை அங்கிருந்து புறப்பட்டு தளி அருகே உள்ள தாசர்பள்ளி அருகே சென்றது. அங்கு அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வந்தம்மா என்ற கூலித் தொழிலாளி இன்று காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டை வெளியே வந்தார். அப்போது அவரை யானை தாக்கியது. இதில் அஸ்வந்தம்மாவும் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தேன்கனிக்கோட்டையில் ஒற்றை யானை அடுத்தடுத்து 2 பெண்களை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீப் போல் பரவியது.

    வசந்தம்மாவின் உறவினர்கள் மற்றும் அன்னி யாளம் கிராம பொதுமக்கள் தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சோதனை சாவடி முன்பும், தாசர்பள்ளி கிராம மக்கள் அதே பகுதியிலும் திடீரென்று திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இருவேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் வனத்துறையினர் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் ஒற்றை யானையை மயக்க ஊசி செலுத்தி அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விடவேண்டும் என்றும், யானை தாக்கி உயிரிழந்த பெண்களின் குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு தொகையும் வழங்க வேண்டும் என்பன கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    இதுகுறித்து தகவலறிந்து அந்தந்த பகுதிகளில் வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று மறியலில் ஈடுபட்டு வருபவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதன்காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவியது.

    • 21 மாத ஊதிய மாற்று நிலுவைத் தொகை அரசு பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டதை உடனடியாக வழங்க வேண்டும்.
    • திடீர் சாலைமறியலால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மதுரை:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் இன்று ஜாக்டோ-ஜியோ சார்பில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி மதுரை பெரியார் பஸ் நிலையம் பகுதியில் உள்ள கட்ட பொம்மன் சிலை சந்திப்பில் இன்று காலை ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வம் தலைமையில் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர் அவர்கள் மெயின் ரோட்டில் அமர்ந்து திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    தேர்தல் கால வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும். தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வு திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வு திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 21 மாத ஊதிய மாற்று நிலுவைத் தொகை அரசு பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டதை உடனடியாக வழங்க வேண்டும்.

    உள்ளாட்சி அமைப்பு களில் பல்வேறு அரசு துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்கள் நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    திடீர் சாலைமறியலால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு கூறினர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் மறியல் செய்த பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் செல்வம் கூறுகையில், தேர்தல் கால வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும். அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பிப்ரவரி 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம். பிப்ரவரி 10-ந் தேதி மாவட்ட அளவில் வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக ஆயத்த மாநாடு நடத்தப்படும். தொடர்ந்து பிப்ரவரி 15-ந் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம். 26-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார். 

    • சில ஆண்டுகளுக்கு முன்பே அரசு பஸ் நிறுத்தப்பட்ட நிலையில் மினி பஸ் மட்டும் இயக்கப்பட்டு வந்தது.
    • கிளவிபட்டி கிராமத்திற்கு சென்று வந்த மினிபஸ்சும் நிறுத்தப்பட்டது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது கிளவிபட்டி கிராமம். இந்த கிராமத்திற்கு காலை, மாலை என 4 முறை கோவில்பட்டியில் இருந்து அரசு பஸ் இயக்கப்பட்டது.

    மேலும் மினி பஸ் ஒன்றும் இயக்கப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பே அரசு பஸ் நிறுத்தப்பட்ட நிலையில் மினி பஸ் மட்டும் இயக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த மாதம் 17-ந்தேதி முதல் கிளவிபட்டி கிராமத்திற்கு சென்று வந்த மினிபஸ்சும் நிறுத்தப்பட்டது.

    இதனால் அந்த கிராம மக்கள், தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் இன்று காலை கோவில்பட்டி-பசுவந்தனை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்த மறியல் போராட்டத்தால் கோவில்பட்டி- பசுவந்தனை சாலையில் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது.

    • உயிரிழந்த மீனாவின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு அறிவித்து உடனடியாக காசோலை வழங்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    • யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    சிக்கமகளூரு:

    கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் ஆல்தூர் அருகே உள்ள ஹெடதால் கிராமத்தை சேர்ந்தவர் மீனா (25). விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை 7 மணியளவில் ஹெடதால் கிராமத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒற்றை யானை மீனாவை தாக்கி மிதித்து கொன்றது. அவரை காப்பாற்ற சென்ற மற்றொரு பெண்ணையும் தாக்கி காயப்படுத்தியது.

    மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் இது 2-வது சம்பவம் என்பதால் ஆத்திரமடைந்த ஹெடதால் கிராம மக்கள் அங்கு முகாமிட்டு யானைக் கூட்டத்தை மீண்டும் ஆல்தூர் வனப்பகுதிக்கு விரட்டக் கோரி பலேஹொன்னூர்-சிக்கமகளூரு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் தொடர்ந்ததால் இதுகுறித்து தகவல் அறிந்த முடிகெரே எம்.எல்.ஏ., நயனா மோட்டம்மா மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் அசைந்து கொடுக்கவில்லை.

    இதனிடையே மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முதல்-மந்திரி சித்தராமையா இந்த விவகாரத்தில் தலையிட்டு போராட்டத்தை வாபஸ் பெறுமாறு கேட்டுக்கொண்டார். மனித-விலங்கு மோதலைத் தடுக்க விரைவில் தீர்வு காண்பதாக உறுதியளித்தார். மேலும் இச்சம்பவத்தில் உயிரிழந்த மீனாவின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு அறிவித்து உடனடியாக காசோலை வழங்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பின்னர் கிராம மக்கள் மறியலை கைவிட்டனர்.

    இச்சம்பவத்தை தொடர்ந்து முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் உடனடி கூட்டம் நடத்தப்பட்டது. அதில் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே கூறுகையில், யானைகள் மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கும், காடுகளை ஒட்டிய காபி எஸ்டேட்டுகளுக்கும் வழி தவறி வருகின்றன என்றார்.

    • நரிக்குடி அருகே மோசமான அரசு பள்ளி கட்டிடத்தை மாற்றக்கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள அகத்தாகுளம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளிக்கூட கட்டிடம் மிகவும் சேதம டைந்த நிலையில் மாண வர்கள் வகுப்பறைக்குள் அமர்ந்து படிக்க முடியாத சூழ்நிலை நிலவி வந்தது.

    மேலும் மழைக்காலங்க ளில் தண்ணீர் வகுப்பறைக் குள் புகுந்து மழையில் நனைந்தபடி படித்து வந்த னர். இதனால் பிள்ளை க ளின் உயிருக்கு பயந்து பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப நெடுங்காலமாக தயங்கி வந்தனர். இந்த நிலையில் பள்ளிக்கு புதிய கட்டிடம் வேண்டி பொதுமக்களும், பெற்றோர் களும் பல முறை கோரிக்கை விடுத்தும் அரசும், மாவட்ட நிர்வாகமும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படு கிறது. இதனால் ஆவேச மடைந்த மாணவர்கள் தங்களது பெற்றோர்கள் மற்றும் கிராம மக்களுடன் சேர்ந்த நரிக்குடி- திருச்சுழி நெடுஞ்சாலையான விடத்தக்குளம் பேருந்து நிறுத்தம் முன்பு இன்று காலை சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் வாகனங்கள் வரிசையாக அணி வகுத்து நின்ற நிலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிக்கப்பட் டது. தகவல றிந்து அங்கு விரைந்து வந்த நரிக்குடி போலீசார் மற்றும் கல்வித் துறை, வருவாய்த்துறை அதி காரிகள் பேச்சு வார்த்தை யில் ஈடுபட்டனர்.

    மேலும் அகத்தாகுளம் தொடக்க பள்ளிக்கு புதிய பள்ளிக்கட்டிடம் கட்டுவது தொடர்பாக உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • அய்யப்பன் கோவில் வீதி முடிவில், சேலம் கோவை புறவழிச்சாலை சர்வீஸ் சாலை உள்ளது.
    • இதன் ஓரமுள்ள பகுதியாவும் மண் அரிப்பு ஏற்பட்டு, எந்நேரமும் சாலை உடைந்து காணப்படுகிறது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அம்மன் நகர் பகுதியில் அய்யப்பன் கோவில் வீதி முடிவில், சேலம் கோவை புறவழிச்சாலை சர்வீஸ் சாலை உள்ளது. இதன் ஓரமுள்ள பகுதியாவும் மண் அரிப்பு ஏற்பட்டு, எந்நேரமும் சாலை உடைந்து காணப்படுகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை நகராட்சி சார்பில் மனு கொடுத்தும், நேரில் சொல்லியும் பலனில்லை. இந்த இடத்தில் பல முறை கார், சரக்கு வாகனம் ஆகியன கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு பலரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து இது போல் அசம்பாவிதம் ஏற்பட்டு பலரும் பாதிக்கப்படும் முன்பு இங்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில், சேலம் கோவை புறவழிச்சாலையில் சாலை மறியல் நடைபெற்றது. அப்போது தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் அழகேசன், ராஜ், தர்மலிங்கம், ஜேம்ஸ், உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். இந்த சாலை மறியல் சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் கோவை பக்கமிருந்து வந்த வாகனங்கள் பல கி.மீ. தூரம் வரை வரிசையில் நின்றன.

    • சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடமும் பலமுறை மனுக்களும் தொலைபேசி வாயிலாகவும் தகவல் தெரிவித்துள்ளனர் .
    • செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் அறிவித்தனர்.

    கடலூர்:

    புவனகிரி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட 13 ,14, 15, 16, 17 ஆகிய வார்டுகளில் குடிநீர் உப்பு நீராக மாறி மக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்து கொடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புவனகிரி பேரூராட்சி நிர்வாகத்திடமும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடமும் பலமுறை மனுக்களும் தொலைபேசி வாயிலாகவும் தகவல் தெரிவித்துள்ளனர் . 

    ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புவனகிரி- விருத்தாச்சலம் சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் ,மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் அறிவித்தனர்.

    அதன்படி இன்று சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது.இதனை அறிந்த புவனகிரி தாசில்தார் அன்பழகன், டிஎஸ்.பி. நாகராஜ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், செயலாளர் (பொறுப்பு) திருமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தி விரைவில் நல்ல குடிநீர் தருகிறோம் என்று கூறினர். இதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

    • திராவிட தமிழர் கட்சி பொதுச்செயலாளர் நெல்லை கதிரவன் மற்றும் செயலாளர் சங்கர் உள்ளிட்ட பொதுமக்கள் மீது போலீசார் லேசாக தடியடி நடத்தினர்.
    • சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    சேலம்:

    நாகர்கோவில் கிருஷ்ணன் வீதியில் 5 பட்டா கேட்டு போராட்டம் நடத்திய திராவிட தமிழர் கட்சி பொதுச்செயலாளர் நெல்லை கதிரவன் மற்றும் செயலாளர் சங்கர் உள்ளிட்ட பொதுமக்கள் மீது போலீசார் லேசாக தடியடி நடத்தினர். மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்ட திராவிட தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் மாநில அமைப்பு செயலாளர் செல்வ முருகேசன் உள்ளிட்ட சிலர் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    இதையடுத்து கலெக்டர் அலுவலகம் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் கலெக்டர் அலுவலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    இது குறித்து திராவிட தமிழர் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கூறும்போது, அருந்ததியர் மக்களுக்கு பட்டா கேட்டு அமைதியான முறையில் போராட்டம் நடத்திய பொதுச்செயலாளர் உள்ளிட்ட 9 பேரை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். தாக்குதல் நடத்திய நாகர்கோவில் டி.எஸ்.பி. மற்றும் காவல்துறையினர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

    • 250 வீடுகள் கடந்த ஆண்டு அதிரடியாக அகற்றப்பட்டது.
    • கூரை வீடுகளுக்கு மின்கம்பத்திலிருந்து கொக்கி போட்டு மின்சாரம் எடுத்து உபயோகித்து வந்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    பண்ருட்டி களத்து மேட்டு ஏரியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு இருந்த 250 வீடுகள் கடந்த ஆண்டு அதிரடியாக அகற்றப்பட்டது. இதில் 25 குடும்பங்கள் வேறு இடத்திற்கு செல்லா மல் அதே இடத்தில்வசித்து வந்தனர். இவர்கள் தங்கி இருந்த கூரை வீடுகளுக்கு மின்கம்பத்திலிருந்து கொக்கி போட்டு மின்சாரம் எடுத்து உபயோகித்து வந்ததாக கூறப்படுகிறது.இது பற்றி தகவல் அறிந்ததும்பண்ருட்டிமின்வாரியஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் எடுத்த வர்களை எச்சரித்து மின் இணைப்புகளை துண்டித்த னர். இதனைக் கண்டித்து பண்ருட்டி களத்து மேட்டு தெருவை சேர்ந்த மகாரா ஜன் மனைவி அமலாதலை மையில் பண்ருட்டி மடப் பட்டு ரோடுகளத்து மேடு பஸ் நிறுத்தம் அருகில் திடீர்சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் பண்ருட்டி- மடப்பட்டு சாலையில் போக்கு வரத்து பாதித்தது .இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ் பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் சுமூகத்தீர்வு ஏற்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்கு வரத்து பாதித்தது.

    • கள்ளக்குறிச்சி - கூத்தக்குடி சாலையில் விருகாவூர் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஓடை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றக் கோரி கள்ளக்குறிச்சி - கூத்தக்குடி சாலையில் விருகாவூர் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது விருகாவூர் (பொறுப்பு) கிராம நிர்வாக அலுவலர் ஞானப்பிரகாஷ் வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில் எஸ்.ஒகையூர் கிராமத்தில் அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது சில நிலங்களில் பயிறு இருந்ததால் அந்த பகுதி ஆக்கிரமிப்பு அகற்றவில்லை.

    இதனால் தங்கள் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியது போல் அனைத்து நிலத்திலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கூறி எஸ்.ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன், ராஜா, கொடியரசு, பிச்சப்பிள்ளை, பொன்னுசாமி உள்ளிட்ட 14 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் மற்றும் சிலர் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. புகாரின் எஸ்.ஒகையூரை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 17 பேர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×