தமிழ்நாடு

8 அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வார்டு

Published On 2024-05-04 06:32 GMT   |   Update On 2024-05-04 08:11 GMT
அதிக வெப்ப தாக்குதலால் 4 வகையான பாதிப்புகள் ஏற்படும்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோடை வெப்பம் வாட்டி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 27 நாட்கள் ஈரோட்டில் 104 டிகிரி வெப்பம் பதிவாகி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை உட்பட 8 மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி கொண்ட இந்த வார்டில் வெப்ப அலர்ஜியால் பாதிக்கப்பட்டு இங்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு முதலுதவி அளிக்க செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை உறை விட மருத்துவ அதிகாரி கூறியதாவது:-

அதிக வெப்ப தாக்குதலால் 4 வகையான பாதிப்புகள் ஏற்படும். வெப்ப எரிச்சலால் புண் ஏற்படும், தோல் சிவப்பாக மாறும், கால்களில் நரம்பு இழுத்துக் கொள்ளும், நீர்ச்சத்து குறைவால் வயிற்று வலி ஏற்படும், கோடை காலத்தில் உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உப்பு சர்க்கரை கரைசல் வழங்கப்படுகின்றனர். வெப்ப அலற்ஜி அல்லது வெப்ப பக்கவாத நோய் பாதிப்பு ஏற்படும் போது உடனடியாக உடல் வெப்பத்தை குறைக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களின் கழுத்து பகுதி, முழங்கால் மடிப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஐஸ்கட்டிகளை கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும், உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்க குளுக்கோஸ், உப்பு கரைசல் நீரை வழங்க வேண்டும் என்று கூறினார்.

Tags:    

Similar News