உள்ளூர் செய்திகள்

வணிகர்களின் தொழில் பாதுகாக்கப்பட வேண்டும்- ஜி.கே.வாசன் கோரிக்கை

Published On 2024-05-04 06:36 GMT   |   Update On 2024-05-04 06:36 GMT
  • பொது மக்களின் வாழ்க்கையில் இணைந்து செயல்படுபவர்கள்.
  • உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வர்த்தகம் செய்யும் வணிகர்களின் பணி அனைவருக்கும் பயனுள்ளது.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வணிகர் தின வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

ஒவ்வொரு வருடமும் மே 5-ந்தேதி வணிகர் தினம் கொண்டாடப்படுவதன் மூலம் வணிகர்களும், அவர்களின் தொழிலும் பாதுகாக்கப்பட வேண்டும். வணிகர்கள் பொது மக்களின் வாழ்க்கையில் இணைந்து செயல்படுபவர்கள். உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வர்த்தகம் செய்யும் வணிகர்களின் பணி அனைவருக்கும் பயனுள்ளது. மத்திய-மாநில அரசுகள் வணிகர்களின் தொழில், வியாபாரம் பெருக, வணிகத்தினால் பொது மக்களும் பயன்பெற திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். மேலும் மத்திய மாநில அரசுகள் வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News