உள்ளூர் செய்திகள்
பல்லடத்தில் மழைநீர் வடிகால் கட்ட பூமி பூஜை
- ரூ. 9.5 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
- நகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம் :
பல்லடம் நகராட்சி 2வது வார்டு சேடபாளையத்தில், ரூ. 9.5 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் கட்டுதல், மற்றும் குடிநீர் குழாய் விரிவாக்கப் பணி ஆகியவற்றுக்கான பூமி பூஜை நடைபெற்றது. நகராட்சித் தலைவர் கவிதாமணி ராஜேந்திர குமார் தலைமையில் நடைபெற்ற பூமி பூஜையில், நகராட்சி ஆணையாளர் விநாயகம்,2வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ராஜசேகரன், நகர திமுக பொறுப்பாளர் ராஜேந்திரகுமார், மற்றும் நகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.