உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்

Published On 2022-06-29 07:53 GMT   |   Update On 2022-06-29 07:53 GMT
  • செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வேலை வாய்ப்பு முகாமை துவக்கிவைக்கிறாா்.
  • மக்களுவெள்ளக்கோவில்க்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி, முகாமில் பங்கேற்றுப் பயனடையுமாறு விழிப்புணா்வு ஏற்படுத்தபடுகிறது.

காங்கயம் :

காங்கயத்தில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் ஜூலை 2ந் தேதி நடைபெற உள்ளது. இதனை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் துவக்கிவைக்கிறாா்.

Tஇந்த முகாமில் வெள்ளக்கோவில் பகுதியைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றுப் பயனடையும் வகையில், நகராட்சி ஆணையா் ஆா். மோகன்குமாா் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், நான்கு சாலைச் சந்திப்பு, தாராபுரம் பிரிவு, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி, முகாமில் பங்கேற்றுப் பயனடையுமாறு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

Tags:    

Similar News