உள்ளூர் செய்திகள்
கோமங்கலம் அருகே டிப்பர் லாரி மோதி தொழிலாளி பலி
- பூசாரிப்பட்டி -சீலக்காம்பட்டி ரோட்டில் சென்ற போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- மோட்டார் சைக்கிள் இருந்த கீழே விழுந்த 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
கோவை:
புதுக்கோட்டை மாவட்டம் பானைபட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 45). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மதுரையை சேர்ந்த பசும்பொன் என்பவரது மோட்டர் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார்.
மோட்டார் சைக்கிள் கோமங்கலம் அருகே உள்ள பூசாரிப்பட்டி -சீலக்காம்பட்டி ரோட்டில் சென்ற போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் இருந்த கீழே விழுந்த 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வெங்கடேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.