தமிழ்நாடு

விபத்தில் சிக்கிய மோட்டார்சைக்கிள்

தரங்கம்பாடி அருகே லாரி மோதி 3 வாலிபர்கள் பலி

Published On 2024-05-02 07:11 GMT   |   Update On 2024-05-02 07:11 GMT
  • தரங்கம்பாடி-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் தரங்கம்பாடி அருகே வந்து கொண்டிருந்தனர்.
  • விபத்து நடந்த உடன் லாரியை நிறுத்தி விட்டு அதன் டிரைவர் தப்பியோடி விட்டார்.

தரங்கம்பாடி:

கடலூர் மாவட்டம் பட்டான் குப்பத்தை சேர்ந்த வாலிபர்கள் ஹரி, ஆகாஷ், சச்சின். இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் புதுக்சேரி மாநிலம் காரைக்காலுக்கு சுற்றுலாவிற்காக சென்றனர். பின்னர் இன்று காலையில் அங்கிருந்து வீடு திரும்பினர்.

தரங்கம்பாடி-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் தரங்கம்பாடி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது 3 பேர் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் ஹரி, ஆகாஷ், சச்சின் ஆகிய 3 பேரும் சாலையில் தூக்கி விசப்பட்டனர். இந்நிலையில் அந்த வழியாக வந்த லாரி 3 பேர் மீதும் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொறையார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

விபத்து நடந்த உடன் லாரியை நிறுத்தி விட்டு அதன் டிரைவர் தப்பியோடி விட்டார். இதுகுறித்து பொறையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடி லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News