search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kovai"

    • கோவை மாவட்டத்தில் கார்த்திகை திருவிழாவை கொண்டாடும் பணிகள், அங்கு உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பாக நடந்து வருகின்றன.
    • கோவை பூ மார்க்கெட்டுகளில் பூக்க ளின் விலை தற்போது அதிகரித்து உள்ளது.

    கோவை,

    உலகம் முழுவதும் கார்த்திகை தீபத்திருவிழா நாளை (26-ந்தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் கார்த்திகை திருவிழாவை கொண்டாடும் பணிகள், அங்கு உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பாக நடந்து வருகின்றன.

    மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அங்குள்ள கோவில்களுக்கு சென்று வழிபடுவதற்கா கவும், வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்வதற்காகவும் பல்வேறு வகையான பூக்கள் மற்றும் பொரி-கடலை ஆகியவற்றை வாங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளையும் பூக்கள் விற்பனை க்காக கொண்டு வரப்படுகி ன்றன. மேலும் வெளி மாவட்டம் -மாநிலங்களில் இருந்து பல்வேறு வகையான பூக்கள் சரக்கு லாரிகளில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படு கிறது.

    கோவை மாவட்டத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் ஒட்டுமொத்த மாக சுமார் 5 டன் பூக்கள் விற்ப னைக்காக கொண்டு வரப்படுகி ன்றன. அங்கு அவை உள்ளூர் வியாபா ரிகளுக்கு ஏலமுறையில் விற்கப்ப்ப ட்டு வருகின்றன. மேலும் பொதுமக்களும் குடும்பத்து டன் வந்திருந்து கிலோக்க ணக்கில் பூக்களை கொள்மு தல் செய்து வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் கார்த்திகை தீபத்திரு விழாவை முன்னிட்டு பூ மார்க்கெட்டில் வாடிக்கை யாளர்களின் கூட்டம் அலைமோதியது. அதேநே ரத்தில் வெளியூர்-வெளி மாவட்டங்களில் இருந்து பூக்களின் வரத்து வெகுவாக குறைந்து இருந்தது.

    எனவே கோவை பூ மார்க்கெட்டுகளில் பூக்க ளின் விலை தற்போது அதிகரித்து உள்ளது.

    மேலும் பொரி மற்றும் கடலை வகைகளின் விலை களும் சற்று அதிகரித்து உள்ளன. கோவை பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவற்றின் விலை ரூ.400 அதிகரித்து இன்று ஒரு கிலோ மல்லி ரூ.1600-க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல முல்லைப்பூவின் விலை தற்போது ரூ.800-க்கு விற்பனை செய்யப்ப டுகிறது. அரளிப்பூவின் விலை மட்டும் ரூ.40 குறைந்து தற்போது ரூ.160-க்கு விற்கப்பட்டு வருகிறது.

    கோவை ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ பூக்களின் விலைவிவரம் (அடைப்புக்குறிக்குள் பழைய விலை):

    ெசவ்வந்தி-120, அரளி-160 (200), சம்பங்கி-80, தாமரை ஒரு பூ-20, ஜாதிமல்லி-800 (600), கோழிக்கொண்டை-50, துளசி-30, மரிக்கொழுந்து ஒரு கட்டு-50, ரோஜா-120, வெள்ளை செவ்வந்தி-280, கலர் செவ்வந்தி-200 (160).

    கோவை பலசரக்கு மட்டும் ஒட்டுமொத்த கடைகளில் தற்போது பொரிகடலை மற்றும் அவல்பொரியின் விலை சற்று அதிகரித்து உள்ளது. நாளை திருக்கார்த்திகை என்பதால் பொதுமக்கள் விலைஉயர்வு பற்றி கவலைப்படாமல் பூக்கள் மற்றும் பலசரக்கு பொரு ட்களை வாங்கி செல்கின்ற னர்.

    • முக்கிய சந்திப்புகளில் சுற்றுவட்டப் பூங்காக்கள்
    • பஸ்கள் திரும்பும் இடங்களில் உள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் நெடுஞ்சாலை துறையினரிடம் கருத்துப்பரிமாற்றம்

    கோவை,

    கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் விபத்துகளைக் குறைப்பது தொடர்பான விழிப்புணர்வு குறுந்தகடை(சிடி) மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டார்.

    இதைத் தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை மாநகரை சிக்னல் இல்லா மாநகராக்கும் முயற்சியில் காவல் துறை ஈடுப்பட்டுள்ளது.

    வட்ட பூங்கா, யூ-டர்ன் திருப்பம் அமைக்கப்பட்டதன் மூலம் பயணத்தின் போது காத்திருப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளதோடு, விபத்துகளும் குறைக்கப்பட்டுள்ளன.

    அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, பொள்ளாச்சி சாலை, வழித்தடங்களில் ஏராளமான தொழிற்சாலைகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் அமைந்துள்ளன.

    போக்குவரத்தை சீர்ப டுத்த சந்திப்புகளில் சிக்னல்கள் நிறுவப்பட்டு செயல்படுத்த வந்தன. சிக்னல்களில் வாக னங்கள் காத்திருக்கும் நேரத்தை மிச்சப்படுத்தி, பயணத்தை எளிமையாக்க மாநகர காவல்துறை, தனியார் அமைப்புடன் இணைந்து ஆய்வு செய்தது.

    இதன் தொடர்ச்சியாக முக்கிய சந்திப்புகளில் சுற்று வட்டப் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், யூ-டர்ன் திரு ப்பங்கள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து சோதனை நடத்தப்பட்டது.

    இதில், கோவை மாநகர போலீஸ், போக்குவரத்து நெரி சலைக் கட்டுப்படு த்துவதிலும், விபத்துகளைக் குறைப்பதிலும், வெற்றி கண்டுள்ளது.

    பஸ்கள் திரும்பும் இடங்க ளில் உள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் நெடுஞ்சா லைத் துறையினரிடம் கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    பழைய சிக்னல்கள் ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பஸ் நிறுத்தங்கள் ஆய்வு செய்ய ப்பட்டு மாற்றி அமைக்கப்படும்.

    முதற்கட்டமாக கோவை மாநகரில் ஏற்படுத்தப்ப டடுள்ள இந்த போக்குவரத்து மாற்றத்தில் நல்ல பலன் கிடைத்துள்ளதாக, இந்த சாலைகளில் நாள்தோறும், பயணிக்கும் வாகன ஓட்டி கள் திருப்தி தெரிவித்துள்ள னர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகள், அடிப்படை கட்டமைப்புகள் வசதிகள் குறித்து ஆய்வு
    • படித்த பிறகு கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம்

    கோவை,

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கான வழிகாட்டல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனால், மாணவர்கள் உயர்கல்வியை தேர்வு செய்வதிலும், வேலை வாய்ப்பு பெறுவதிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

    இந்நிலையில், தற்போது பிளஸ்-2 படிக்கும் மாண வர்கள் அடுத்த ஆண்டு கல்லூரிக்கு சேரும் ஆர்வத்தை தூண்டும் வகை யில் களப்பயணம் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஒரு பள்ளிக்கு தலா 35 மாணவர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மாவட்டம் முழுவதும் 113 மேல்நி லைப்பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 4 ஆயிரத்து 45 மாணவர்கள் கல்லூரி களப்பயணத்திற்கு தேர்வாகியுள்ளனர். இந்த மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்த பாடப்பிரிவுகளின் அடிப்படையில் அந்தந்த பாடப்பிரிவு உள்ள கல்லூரிகளுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

    இதற்காக, பாரதியார் பல்கலைக்கழகம் வேளாண் பல்கலைக்கழகம், கோவை, மேட்டுப்பாளையம், வால்பாறை அரசு கலைக்கல்லூரிகள், அரசு தொழில்நுட்ப கல்லூரி, கோவை அரசு மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் 24 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்த களப்பயணத்தின் போது மாணவர்கள் கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகள், நூலகம், ஆய்வகங்கள், உபகரணங்கள், விளையாட்டு மைதானங்கள், விடுதி அறைகள், உணவுகூடம், வகுப்பறைகள், அடிப்படை கட்டமைப்புகள் வசதிகள் குறித்து பார்வையிட உள்ளனர்.

    மேலும், கல்லூரியில் உள்ள இளங்கலை படிப்புகள், உதவித் தொகை திட்டங்கள், போட்டி தேர்வுகள், வேலைவாய்ப்புகள், பயிற்சி வகுப்புகள், சான்றிதழ் படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள், படித்த பிறகு கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். மாணவர்களை கல்லூரிக்கு அழைத்து செல்ல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் பஸ்கள் ஏற்பாடு செய்யபடவுள்ளது.

    மேலும், களப்பயணத்தின் போது மாணவர்கள் சீருடையில் தான் வர வேண்டும். மாணவர்களுக்கு மதிய உணவு, தேநீர் உள்ளிட்டவையும் வழங்கப்படும். இந்த கல்லூரி களப்பயணத்திற்கு மாணவர்களை வரும் டிசம்பர் முதல் வாரத்தில் அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தினசரி காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொள்வார்கள்.
    • அனைத்து இடங்களிலும் உள்ள குப்பைகள் அகற்றும் பணிகள் மேற்கொள் ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கோவை,

    கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன.

    இங்கு குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தெருக்கள் மற்றும் முக்கிய சாலைகளில் தினசரி 100 முதல் 1200 டன் குப்பை தேங்கும். இதனை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தினசரி காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொள்வார்கள்.

    தூய்மைப் பணியாளர்கள் வீடு, வீடாக சேகரிக்கும் குப்பைகளையும், பொது இடங்களில் சேகரிக்கும் குப்பைகளை குறிப்பிட்ட இடங்களில் குவித்து வைத்து பின்னர் அதனை மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தனித்தனியாக பிரித்து வாகனங்கள் மூலம் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று கொட்டும் பணியை மேற்கொள்வார்கள்.

    நேற்று தீபாவளி பண்டிகை என்பதால் கடந்த 2 நாளாக கோவை மாநகரில் 100 வார்டுகளிலும் வழக்கத்தைவிட குப்பை 250 டன் கூடுதலாக சேர்ந்தது. தீபாவளி நாளில் மட்டும் மொத்தம் 1,350 டன் குப்பை சேர்ந்தது. இந்தக் குப்பைகளை இன்று காலை முதல் தூய்மைப் பணியாளர்கள் அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தூய்மைப் பணியாளர்கள் பண்டிகை முடிந்த கையோடு ஓய்வில்லாமல் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது சில தூய்மை பணியாளர்கள் விடுமுறையில் இருப்பதால் ஒரு சில இடங்களில் குப்பைகள் அகற்றும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நாளை பணியாளர்கள் அனைவரும் பணிக்கு வந்து விடுவார்கள் என்பதால் நாளை அனைத்து இடங்களிலும் உள்ள குப்பைகள் அகற்றும் பணிகள் மேற்கொள் ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • புறநகரில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 3 பேர் என மாவட்டம் முழுவதும் 69 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் துறை சார்பில் குறிப்பிட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் தடையை மீறி பட்டாசு வெடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

    கோவை,

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு அனைவரும் பட்டாசு வெடிப்பது வழக்கம். பட்டாசு அளவுக்கு அதிகமாக வெடிப்பதனால் காற்றுமாசு ஏற்படுகிறது. இதனால் வயதானவர்கள் மற்றும் மூச்சு திணறல் பாதிப்பு உள்ளவர்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகைக்கு வெடி க்கப்படும் பட்டாசுகளினால் காற்று மாசு ஏற்படாமல் தடுக்க குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பொதுமக்கள் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியது.மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் துறை சார்பில் குறிப்பிட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் தடையை மீறி பட்டாசு வெடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் மாநகரில் அனுமதி வழங்கப்பட்ட நேரத்தை தவிர்த்து எங்காவது பட்டாசு வெடிக்கப்படு கிறதா? என போலீசார் தீவிரமாக ரோந்து சென்று கண்காணித்தனர்.

    அப்போது அனுமதி அளிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து தடை செய்யப்பட்ட நேரத்தில் பட்டாசு வெடித்ததாக ஆர்.எஸ்.புரத்தில் 6 பேர் மீதும், வடவள்ளியில் 6 பேர் மீதும், சிங்காநல்லூரில் 7 பேர் மீதும், செல்வபுரத்தில் 5 பேர் மீதும், துடியலூர், உக்கடம், சாய்பாபா காலனியில் தலா 4 பேர் மீதும், குனியமுத்தூர், சுந்தராபுரம், பெரியக்கடை வீதியில் தலா 3 பேர் மீதும், வெரைட்டிஹால் ரோடு, ரேஸ்கோர்ஸ், ராமநாதபுரம், போத்தனூர், சரவணம்பட்டியில் தலா 2 பேர் மீது என மாநகரில் மொத்தம் 66 பேர் மீது 66 வழக்குகள் பதிவு செய்யப் பட்டது. புறநகரில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 3 பேர் என மாவட்டம் முழுவதும் 69 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    • பெருமை பெற்று விளங்கும் வேலாயுத சுவாமி கோவில் உள்ளது.
    • பாறையில் உள்ள முருகப்பெருமானின் திருப்பாதத்துக்கே முதல் பூஜை செய்யப்படுகிறது.

    கோவை-பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் கோவை மாநகரில் இருந்து தெற்கே

    சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது கிணத்துக்கடவு.

    இந்த ஊரின் நடுவே உள்ள பொன்மலையில் மூர்த்தி, தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும்

    பெருமை பெற்று விளங்கும் வேலாயுத சுவாமி கோவில் உள்ளது.

    ஞானப்பழத்திற்காக பெற்றோரான சிவ பெருமான் உமையாளுடன் கோபித்துக் கொண்டு

    பழனியில் குடிகொண்ட முத்துக்குமார சுவாமி இந்தபொன்மலையில் பாதம் பதித்ததாக இக்கோவில் தலபுராணம் கூறுகிறது.

    எனவே இங்கு மூலவரான வேலாயுத சுவாமிக்கு பூஜை நடத்துவதற்கு முன்பாக,

    பாறையில் உள்ள முருகப்பெருமானின் திருப்பாதத்துக்கே முதல் பூஜை செய்யப்படுகிறது.

    திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இக்கோவிலின் வெளிப்பிரகாரத்தில்

    தனி மண்டபத்தில் உள்ள முருகப் பெருமானின் திருப்பாதங்களை தரிசித்தால்,

    விரைவில் விருப்பங்கள் நிறைவேறும் என்கிறார்கள்.

    மேலும் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்.

    • கோவை, நெல்லை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இயல்பானஅளவில் பெய்யும்
    • மானாவாரி சாகுபடியில் விதைகளை கடினப்படுத்தி விதைப்பு செய்ய வலியுறுத்தல்

    கோவை,

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை ஆகியவை மூலம் மாநிலஅளவில் நீர்நிலைகள் பெருகி விவசாயம் செழித்து வருகிறது.

    இதன் ஒருபகுதியாக கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனாலும் இது எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. எனவே 2 மாவட்டங்களிலும் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.

    இந்த நிலையில் கோவை, நீலகிரி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த மாதம் அக்டோபர் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இது டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவை, நீலகிரியில் ஏற்கெனவே தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் குறித்து கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் முன்னறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

    அதன்படி தமிழகத்தில் அரியலூர், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், சேலம், தஞ்சை, நீலகிரி, திருச்சி, திருவாரூர், தென்காசி, தூத்துக்குடி, திருப்பத்தூர், கன்னியாக்குமரி, காஞ்சிபுரம், தேனி, மதுரை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம், நெல்லை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் வடகிழக்குபருவமழை இயல்பானஅளவில் பெய்யும்.

    சென்னை, செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விருதுநகர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இயல்பைவிட குறைவான அளவில் பெய்யும்.

    எனவே அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் வடகிழக்கு பருவமழை காலத்துக்கான குறுகிய-மத்திய கால பயிர் ரகங்களை தேர்வுசெய்து பயிரிட வேண்டும், பாசனவசதியுள்ள பகுதிகளில் மட்டும் நீண்டகால பயிர் ரகங்களை தேர்வு செய்யலாம்.

    மேலும் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் மழைநீரை சேமிக்கும் வகையில் குறுக்கும் நெடுக்குமாக 20 அடி இடைவெளியில் சிறுவரப்புகளை அமைக்கலாம். பண்ணை குட்டைகளில் மழைநீரை தேக்கி விவசாயத்துக்கு பயன்படுத்தலாம். மானாவாரி சாகுபடியில் விதைகளை கடினப்படுத்தி விதைப்பு செய்ய வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட விதை நேர்த்தி முறைகளை பின்பற்றினால் வடகிழக்கு பருவமழை மூலம் விவசாயத்தை சிறப்பாக செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • சிறுமுகை சாலையில் வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்கினார்
    • மேட்டுப்பாளையம் போலீசார் ஏற்கெனவே 4 பேரை கைது செய்து இருந்தனர்

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் வெள்ளிப்பாளையம் ரோட்டை சேர்ந்த ராமு என்பவரது மகன் கந்தவேல் (30).கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு மேட்டுப்பாளையம் பகுதியில் நடந்த இரட்டைக்கொலை வழக்கில் இரண்டாவது எதிரியாக உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 26-ந் தேதி கந்தவேலுவை முன்விரோதம் காரணமாக சச்சின் என்ற நவீன்குமார் மற்றும் அவரது நண்பர்கள் திலீப் (18), விபின் பிரசாத் (18),கவின் (18), மற்றும் ஒரு சிறுவன் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து வெட்டி கொலை செய்ய முயன்றனர்.

    இதில் கந்தவேல் படுகாயம் அடைந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீப், விபின் பிரசாத், சச்சின், நவீன்குமார் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். கவின் என்ற வாலிபர் தலைமறைவாக இருந்தார்.

    அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். சிறுமுகை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தபோது போலீசாரிடம் அவர் சிக்கினார். 

    • கோவை மாவட்டத்தில் 89.927 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு, தமிழகத்தில் முதலிடம் பிடித்து உள்ளது
    • தென்னந்தோப்புகளில் ரூ.24.50 லட்சம் மதிப்பில் 14 செயல்விளக்கத்திடல்கள் அமைக்கவும் நடவடிக்கை

    கோவை,

    உலக தென்னை தினத்தை முன்னிட்டு கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் தென்னை சார்ந்த கருத்துக் காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தலைமைதாங்கி தென்னை நோய் மற்றும் பூச்சி மேலாண்மை குறித்த துண்டு பிரசுரங்களை வெளி யிட்டார். 3 விவசாயிகளுக்கு நானோ உரங்கள் தொகுப்பை வழங்கினார்.

    தென்னை கருத்தரங்கில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பேசுகையில் கூறியதாவது:-

    இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் முன்னணி வகித்து வருகின்றன. உலக அளவிலான தேங்காய் உற்பத்தியில் இந்தியா முதலிடம் பெற்று உள்ளது.

    கோவை மாவட்டத்தில் 89.927 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு, தமிழகத்தில் முதலிடம் பிடித்து உள்ளது. குறிப்பாக ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி தெற்கு, சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. இதன்மூலம் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து உள்ளது.

    தென்னை மரங்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உரங்களை போட்டு நல்லமுறையில் பராமரித்து வந்தால் அதிகமாக காய்களை அறுவடை செய்ய முடியும்.

    கோவை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.16.56 லட்சம் நிதியில் 47 கிராம ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு தலா 600 நெட்டை வீதம் ஒட்டு மொத்தமாக 27 ஆயிரத்து 600 தென்னங்கன்றுகள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் தென்னந்தோப்புகளில் ரூ.24.50 லட்சம் மதிப்பில் 14 செயல்விளக்கத்திடல்கள் நடப்பாண்டில் அமைக்கப் பட உள்ளது.தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்களை மதிப்புகூட்டு பொருட்களாக மாற்றி விற்பனை செய்தால் சந்தையில் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். இதற்காக அரசின் வேளாண்மை சார்ந்த பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் வேளாண் இணைஇயக்குநர் முத்து லட்சுமி, துணை இயக்குநர் புனிதா, தோட்டக்கலை கல்லூரி ஆராய்ச்சி நிலைய முதல்வர் ஐரின் வேதமணி, கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஷபிஅகமது, வேளாண் வணிகம் விற்பனைத்துறை துணை இயக்குநர் விஜய கல்பனா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி, தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கல்லூரி வளாகத்திலேயே முதல் பட்டதாரி, வருமானம், இருப்பிட சான்று, பான்கார்டு சேவைகளை பெற விண்ணப்பிக்கலாம்
    • கலெக்டர் அலுவலக கண்காணிப்பு அலுவலகம் மூலம் கல்விக்கடன் வழங்கும் பணியை மேற்பார்வை செய்ய நடவடிக்கை

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவ- மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கு கல்வி கடன் வழங்கும் முகாம்கள் கோவை மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த மாதம் 16-ந் தேதி பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்திலும், 18-ந் தேதி ஈச்சனாரியில் உள்ள கற்பகம் பல்கலைக் கழகத்திலும் கல்வி கடன் முகாம்கள் நடந்து ஆவணங்கள் முறையாக சரிபார்க்கப்பட்டு பல மாணவர்களுக்கு கல்வி கடன்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த முகாமில் கலந்து பயன்பெறாத மாணவர்களுக்கும் மற்றும் பொறியியல் கல்லூரியின் கலந்தாய்வு செப்டம்பர் மாத முதல் வாரத்தில் நிறைவடைந்து மாணவர்கள் கல்லூரியில் சேர உள்ளதால் பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு செப்டம்பர் மாதம் மூன்றாம் மற்றும் நான்காம் வாரத்தில் கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

    மேலும் வருகிற 22-ந் தேதி அன்று குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி, 26-ந் தேதி அன்று பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, 29-ந் தேதி ஈச்சனாரியில் உள்ள கற்பகம் உயர்கல்வி அகாடமி ஆகிய இடங்களில் கலை மற்றும் அறிவியல் துறை மாணவ- மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு கல்வி கடன் வழங்கும் முகாம்கள் நடைபெற உள்ளன.

    இந்த முகாமில் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் பொருட்டு மாணவர்கள் பயிலும் கல்லூரி வளாகத்திலேயே முதல் பட்டதாரி, வருமானம், இருப்பிட சான்றுகள் மற்றும் பான்கார்டு ஆகிய சேவைகளை பெற நாளை (4-ந் தேதி) முதல் 20-ந் தேதி வரை இ-சேவை மையங்கள் கல்லூரி வளாகத்திலேயே அமைக்கப்பட்டு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    கல்விக்கடன் பெற தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கடன் வழங்கும் பொருட்டு மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் உறுப்பினர் செயலராக கொண்டு 10 அலுவலர்கள் கொண்ட முதன்மை குழுவினை அமைத்து இப்பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலக தரைத்தளம் அறை எண்-16-ல் தனியாக கண்காணிப்பு அலுவலகம் அமைக்கப்பட்டு கல்விக்கடன் வழங்கும் பணியை மேற்பார்வை செய்யப்பட்டு வருகிறது.

    எனவே உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவிகள் அனைவரும் நாளை முதல் 20-ந் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் கல்நது கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் மஞ்சள்காமாலை நோய்க்காக சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு
    • வீரகேரளம் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது

    கோவை,

    கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் அம்மன் அர்ச்சுனன். இவரது மகன் கோபாலகி ருஷ்ணன் (வயது 39). இவர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளராக உள்ளார். இவருக்கு திருமணமாகி கலைவாணி என்ற மனைவியும், 11 மாதத்தில் செயான் என்ற மகனும் உள்ளனர்.

    இந்தநிலையில் கோபா லகிருஷ்ணனுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மஞ்கள்காமாலை பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    அதன் பின்னர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார். அதன் பின்னர் அவருக்கு மீண்டும் மஞ்சள்காமாலை பாதிப்பு அதிகமானது. இத னையடுத்து கோபாலகிருஷ்ணன் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை அவரது உறவினர்கள் மேல் சிகிச்சைக்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனி யார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த கோபாலகிருஷ்ணன் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக கோவை உக்கடம் சுண்டக்கா முத்தூர் ரோட்டில் உள்ள திருநகர் 3-வது வீதியில் உள்ள வீட்டிற்கு மதியம் 1 மணியளவில் கொண்டு வரப்படுகிறது.

    பின்னர் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து கோபாலகிருஷ்ணனின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாலை 5 மணிக்கு வீரகேரளத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

    • தனக்கு தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி
    • கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுபாளை யத்தை சேர்ந்தவர் பிரதீப். இவரது ரம்யா (வயது 23). இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு மகன் உள்ளார்.

    சம்பவத்தன்று வெளியே சென்ற பிரதீப் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் வீட்டிற்கு சென்றார்.

    கணவர் குடித்து விட்டு வந்ததால் ஆத்திரம் அடைந்த ரம்யா அவரை கண்டித்தார். அப்போது கணவர்-மனை விக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவே தனை அடைந்த ரம்யா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனக்கு தானே கழுத்தை அறுத்து தற்கொ லைக்கு முயன்றார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரதீப் தனது மனைவியை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு ரம்யாவை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×