உள்ளூர் செய்திகள்

சொத்து தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு அரிவாள் வெட்டு: உறவினர் கைது

Published On 2023-09-08 07:55 GMT   |   Update On 2023-09-08 07:55 GMT
  • அரிவாளால் வெட்டியதில் பாஸ்கர் அவரது மனைவி சக்திகனி மகன்கள் சத்தியநாராணன், சத்திய கிருஷ்ணன், மகள் சக்திகனி 5 பேரும் படுகாயமடைந்தனர்.
  • புகாரின் பேரில் ஆழ்வார் திருநகரி சப்-இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனசேகரை கைது செய்தனர்.

தென்திருப்பேரை:

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள நவலெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 60). இவரது மனைவி சக்திகனி (57), இவர்களுக்கு சத்தியநாராயணன் (37), சத்தியகிருஷ்ணன் (28) என்ற 2 மகன்களும், சக்திகனி (30) என்ற மகளும் உள்ளனர்.

இவர்களுக்கும், பாஸ்கர் மனைவி சக்திகனியின் தம்பிகளுக்கும் இடையே சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு பாஸ்கர் வீட்டிற்கு வந்த சக்திகனியின் தம்பி தனசேகர் (49), அவரது மனைவி சக்திபாமா மற்றொரு தம்பியான குணசேகரன் மனைவி பாக்கியலெட்சுமி, மற்றொரு தம்பியான சக்திவேல் மனைவி தங்கம் ஆகிய 4 பேரும் பாஸ்கர் குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து அரிவாளால் வெட்டியதில் பாஸ்கர் அவரது மனைவி சக்திகனி மகன்கள் சத்தியநாராணன், சத்திய கிருஷ்ணன், மகள் சக்திகனி 5 பேரும் படுகாயமடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பான புகாரின் பேரில் ஆழ்வார் திருநகரி சப்-இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று காலை தனசேகரை கைது செய்தனர்.

தொடர்ந்து, சக்திபாமா பாக்கியலெட்சுமி, தங்கம் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News