search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dispute"

    • தகராறில் ராமகிருஷ்ணன், விக்னேஷ் இருவரும் சேர்ந்து மது பாட்டிலால் சாமிதுரையை தாக்கியுள்ளனர்.
    • சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த குமரலிங்கம் போலீசார் ராமகிருஷ்ணன், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் பகுதியில் உள்ள பழைய ராஜவாய்க்கால் கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழிலாளி ஒருவர் இறந்து கிடந்தார்.

    உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த நபர் சாளரப்பட்டியைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவரது மகன் சாமிதுரை (வயது 42) என்பது தெரியவந்தது.

    பிரேத பரிசோதனை அறிக்கையில் சாமிதுரையின் தோள்பட்டையில் எலும்பு முறிவு இருப்பது தெரியவந்தது. அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்ததால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் பாட்டான் என்கிற ராமகிருஷ்ணன் (34), பாலபூபதி என்பவரது மகன் விக்னேஷ் (26) ஆகியோர் சாமிதுரையை அடித்துக்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. கட்டிடத் தொழிலாளர்களான இவர்கள் 3 பேரும் நண்பர்களாக இருந்துள்ளனர். சம்பவத்தன்று ராஜவாய்க்கால் கரையில் அமர்ந்து மூவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

    அப்போது ஏற்பட்ட தகராறில் ராமகிருஷ்ணன், விக்னேஷ் இருவரும் சேர்ந்து மது பாட்டிலால் சாமிதுரையை தாக்கியுள்ளனர். மயங்கி விழுந்த சாமிதுரையை அங்கேயே விட்டு விட்டு சென்றுள்ளனர். பலத்த காயமடைந்த சாமிதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த குமரலிங்கம் போலீசார் ராமகிருஷ்ணன், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

    • டெல்லியில் இருந்து இரவு 8 மணி அளவில் மணமகன் குடும்பத்தினர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
    • மணமகனும் அவரது குடும்பத்தினரும் குழப்பம் அடைந்தனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், டெல்லி சீமாபுரி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

    இவர்களது திருமணம் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற இருந்த நிலையில் மணமகள் வீட்டார் அதற்கான ஏற்பாடுகளை தடபுடலாக செய்திருந்தனர்.

    அதன்படி டெல்லியில் இருந்து இரவு 8 மணி அளவில் மணமகன் குடும்பத்தினர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.


    இந்நிலையில் மணமகனின் வயதான பாட்டி உட்காருவதற்காக ஒரு நாற்காலி கேட்டுள்ளார். ஆனால் மணமகளின் உறவினர்கள் அவருக்கு நாற்காலி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதுபற்றி பாட்டி மணமகனிடம் முறையிட்டுள்ளார். இதனால் இந்த விவகாரம் பெரிதாகியது. இதையடுத்து மணமகனும் அவரது குடும்பத்தினரும் குழப்பம் அடைந்தனர்.

    அவர்கள் மணமகளிடம் சென்று நீ எங்களுடன் வீட்டுக்கு வந்தால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் மேலும் அதிகரித்தது.

    இதைத்தொடர்ந்து திருமணத்தை நிறுத்துவதாக மணமகன் அறிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. திருமண வரவேற்புக்காக தாங்கள் செலவழித்த தொகையை தந்த பின்னரே இடத்தை விட்டு போகுமாறு மணமகனின் குடும்பத்தினரிடம் மணமகள் வீட்டார் கூறினர்.

    அதன்படி மணமகன் குடும்பத்தினர் நஷ்டஈடு தொகையை கொடுக்க ஒப்புக்கொண்டனர். அதன் பிறகு மணமகன் வீட்டார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக எங்களுக்கு எந்த ஒரு புகாரும் வரவில்லை என அப்பகுதியை சேர்ந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு அனுக்ரிதிசர்மா கூறினார்.

    • பெட்ரோல் போடும் சாக்கில் அந்த பெண்ணிடம் பேசுவதை நிறுத்தி கொள்ளுங்கள் என்று எச்சரித்து உள்ளனர்.
    • ஆண்கள், பெண்கள் என 20 பேர் கொண்ட கும்பலுடன் வந்த பங்கில் வேலை செய்பவர்களை சராமரியாக தாக்கினர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் அடையாளம் தெரியாத வாலிபர்கள் 2 பேர் அங்கு பெட்ரோல் போடும் சாக்கில் அந்த பங்கிற்கு அடிக்கடி வந்து, அங்கு பெட்ரோல் போடும் வேலையில் இருந்த இளம்பெண் நிஷா வயது.21 என்பவரிடம் பேச்சு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் சக ஊழியர்களான தனுஷ் வயது.38, இனியன் வயது.28, இருவரும் அந்த வாலிபர்களிடம் அடிக்கடி இங்கு வந்து பெட்ரோல் போடும் சாக்கில் அந்த பெண்ணிடம் பேசுவதை நிறுத்தி கொள்ளுங்கள் என்று எச்சரித்து உள்ளனர், பெண்ணிடம் பேசும் காட்சி இங்குள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி தேவையில்லாத பிரச்சனையை ஏற்படுத்தும் என்று கூறி அந்த வாலிபர்களை கண்டித்துள்ளனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த அந்த இரண்டு வாலிபர்களும் எங்கள் ஏரியாவில் பெட்ரொல் பங்க் வைத்து கொண்டு எங்களுக்கே அறிவுரை சொல்கிறாயா? என தகராறு செய்து உறவினர்கள் ஆண்கள், பெண்கள் என 20 பேர் கொண்ட கும்பலுடன் வந்த பங்கில் வேலை செய்பவர்களை சராமரியாக தாக்கினர். அங்கிருந்த கண்ணாடி டோர், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை அடித்து நொறுக்கி, சேதப்படுத்தியதுடன் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தனுஷ், இனியன், மற்றொரு பெண் ஊழியர் வாசுகி ஆகியோரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

    காயமடைந்த 3 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சினிமாவில் நடக்கும் காட்சிகள் பெட்ரோல் பங்கில் 1 மணி நேரம் நடந்த இந்த சம்பவங்கள் அங்குள்ள சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகி இருந்தன. பிறகு பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் கல்பாக்கம் போலீசார் சி.சி.டி.வி. காட்சி பதிவினை வைத்து தாக்குதல் நடத்தியவர்கள் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • இதனை ரேவதி கண்டிப்பதால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு வரும்.
    • இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்ததை கண்ட குழந்தைகள் அலறி அழுதனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பெரம்பட்டு பகுதியில் வசிப்பவர் முருகன் (வயது 40). சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (36). வீட்டில் இருந்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். சமையல் வேலை செய்யும் முருகன் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர். இதனை ரேவதி கண்டிப்பதால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு வரும். அக்கம்பக்கத்தினர் முருகனை சமாதானம் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சமையல் வேலைக்கு சென்ற முருகன், வேலை முடித்து நேற்று மதியம் வீடு திரும்பினார். அப்போது அவர் மது குடித்து முழு போதையில் வீட்டிற்கு வந்ததை பார்த்த ரேவதி, இதனை கண்டித்துள்ளார். 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சம்பாதிக்கும் பணத்தை குடித்தே அழித்தால் அவர்களை எவ்வாறு கரை சேர்ப்பது என கேட்டுள்ளார்.

    இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்படடு, முருகன் வீட்டை விட்டு வெளியேறினார். வெளியில் சென்று மீண்டும் குடித்துவிட்டு இரவு 10.30 மணியளவில் வீடு திரும்பினார். மீண்டும் குடித்துவிட்டு கணவன் வந்ததை கண்ட ரேவதி மேலும் ஆத்திரமடைந்தார். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியதால், ரேவதியை முருகன் தாக்கினார். மேலும், சமையல் பணியில் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து ரேவதியின் கழுத்தினை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்ததை கண்ட குழந்தைகள் அலறி அழுதனர். சத்தம் கேட்டு வீட்டிற்குள் வந்த அக்கம்பக்கத்தினர் ரேவதியை மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த அண்ணாமலை நகர் இனஸ்பெக்டர் (பொறுப்பு) ஆறுமுகம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிப்பதை கண்டித்த மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல கணவன் முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் செல்லமுத்து (வயது 35). கடந்த 12-ந் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் பூபதி (20) உட்பட 4 பேர் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளனர். இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியது குறித்து தட்டி கேட்ட அண்ணாமலை என்பவரை பூபதி தரப்பினர் தாக்கியுள்ளனர்.

    இதை தடுக்கச் சென்ற செல்லமுத்து மற்றும் சிலரை பூபதி தரப்பினர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் பூபதி, கண்ணு மகன் சுப்ரமணியன், ஏழுமலை மகன் வெங்கடேசன், வேலு மகன் கோவிந்தராஜ் ஆகிய 4 பேர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பூபதியை கைது செய்தனர்.

    • விற்பனையாளரிடம் தகராறு செய்து பணி செய்ய விடாமல் தடுத்தார்.
    • விற்பனையாளா் பாலதண்டயுதம் வேதாரண்யம் போலீசில் புகார் அளித்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலத்தில் அரசு மதுபான கடை உள்ளது.

    அதில் பாலதண்டயுதம் (வயது 50) என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.

    தீபாவளி அன்று கடினவயல் நடுக்காட்டைச் சேர்ந்த கோபால் (45) என்பவா் டாஸ்மாக் கடைக்கு சென்று விற்பனையாளரிடம் தகராறு செய்து பணி செய்ய விடாமல் தடுத்தார்.

    இது குறித்து விற்பனை யாளா் பாலதண்டயுதம் வேதாரண்யம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து கோபால் (45) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • புதுவை பெரிய காலாப்பட்டு சுப்பையா நகரை சேர்ந்தவர் சிவகுமார்.
    • விலை உயர்ந்த பைக்கை அடித்து உடைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை பெரிய காலாப்பட்டு சுப்பையா நகரை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி ஹேமாதேவி. இவர் காலாப்பட்டில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது வீட்டின் அருகே ஆனந்தன் என்பவர் வீடு கட்டி கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே இருவருக்கும் இடத்தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று ஆனந்தனுக்கும் ஹேமாதேவிக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.

    அப்போது ஆனந்தன் இரும்பு கம்பியால் ஹேமாதேவி வீட்டின் அருகே நின்ற கார் மற்றும் விலை உயர்ந்த பைக்கை அடித்து உடைத்தார்.

    இதுகுறித்து ஹேமாதேவி கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • இரு தரப்பினரும் ஒருவரையொரு வர் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
    • வரஞ்சரம் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே விருகாவூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது 50). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (38) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்ப வத்தன்று இரு தரப்பினரும் ஒருவரையொரு வர் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து ஆதிமூலம் கொடுத்த புகாரின் பேரில் அரிகிருஷ்ணன், கலிவரதன், மதுர முத்து ஆகிய 3 பேர் மீதும், இதேபோல் ராதா கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் ஆதிமூலம், ராஜி மற்றும் அவரது மனைவி சிவகாமி, மகன் தனுஷ், ஆதிமூலம் மகன் மணிகண்டன் ஆகிய 5 பேர் மீதும் வரஞ்சரம் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கமலா தன்னுடைய குடும்ப தேவைக்காக மருமகன் பிரசாத்திடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கினார்.
    • பணத்தை கேட்டு பிரசாத் தனது மாமியார் கமலாவிடம் தகராறு செய்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டம் குண்டல சிங்காரம் இந்திரம்மா காலனியைச் சேர்ந்தவர் கமலா. இவருடைய மகளை பிரசாத் என்பவர் திருமணம் செய்துள்ளார்.

    இவர், மஞ்சிரியாலா மாவட்டம் கோடபள்ளி போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிகிறார்.

    கமலா தன்னுடைய குடும்ப தேவைக்காக மருமகன் பிரசாத்திடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கினார். அந்த பணத்தை பிரசாத் சில நாட்களாக திருப்பி கொடுக்குமாறு கமலாவிடம் கேட்டு வந்தார். கமலா பணத்தை தராமல் இருந்தார்.

    இந்நிலையில் பணத்தை கேட்டு பிரசாத் தனது மாமியார் கமலாவிடம் தகராறு செய்தார். இதில் வாக்குவாதம் முற்றியது. பிரசாத் ஆத்திரமடைந்து தன்னிடம் இருந்த துப்பாக்கியால் கமலாவை சுட்டார். குண்டு பாய்ந்து கமலா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர்.

    கமலாவை துப்பாக்கியால் சுட்ட பிரசாத்தை பிடித்து கட்டி வைத்தனர்.

    இதையடுத்து சிட்டகபாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் பிரசாத் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்தப் பகுதியில் சூட்டிங் நடைபெற்றதாகவும் அப்போது வேன் வரும்போது வழியில் வாகனம் நிறுத்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
    • இதில் ராணி மற்றும் சிவக்குமார் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா மனைவி ராணி (வயது 45) சம்பவத்தன்று அந்தப் பகுதியில் சூட்டிங் நடைபெற்றதாகவும் அப்போது வேன் வரும்போது வழியில் வாகனம் நிறுத்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (40) என்பவர் கேட்டபோது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. இதில் ராணி மற்றும் சிவக்குமார் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.

    இதுகுறித்து ராணி கொடுத்த புகாரின் பேரில் சிவக்குமார் அவரது மனைவி செல்வி ஆகிய 2 பேர் மீதும், இதே போல் சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் ராஜா அவரது மனைவி ராணி, மகள் சங்கீதா உறவினர் ஏழுமலை ஆகிய 4 பேர் மீதும் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கொரோனா தொற்று காலத்தில் ரூ35 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
    • குடி போதையில் வந்த நாகப்பன், வேலவனை வழிமறித்து பணத்தை கேட்டார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி ஒன்றியம் குண்டலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலவன் (வயது 38). கூலித் தொழிலாளி. இவர் தனது பெரியப்பா மகன் நாகப்பன் (50) என்பவரிடம் கொரோனா தொற்று காலத்தில் ரூ35 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. நாகப்பனிடம் கடன் வாங்கிய பணத்தை வேலவன் திரும்ப கொடுத்த நிலையில், வட்டி பணம் தரவேண்டுமென என வேலவனிடம், நாகப்பன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் வேலவன் தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். குடி போதையில் வந்த நாகப்பன், வேலவனை வழிமறித்து பணத்தை கேட்டார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த நாகப்பன், வேலவனின் தலையில் வெட்டினார். இதில் வேலவனின் இடது காதில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் வேலவனை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கெடார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிராமத்தின் சாலையில் 4 அடி ஆக்கிரமித்து வீடு கட்ட முயற்சிப்பதாக அக்கம் பக்கத்தினர் புகார் தெரிவித்தனர்.
    • அதிர்ச்சியடைந்த பஞ்சாயத்து தலைவர் சசிக்குமார் அவர்களை தடுத்து நிறுத்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கருங்குழி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 48). இவர் தனது வீட்டை விரிவாக்கம் செய்து கட்டினார். கிராமத்தின் சாலையில் 4 அடி ஆக்கிரமித்து வீடு கட்ட முயற்சிப்பதாக அக்கம் பக்கத்தினர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஊர் பிரமுகர்கள் கண்ணனிடம் பேசி, உங்களுக்கு சொந்தமான இடத்தில் மட்டும் வீடு கட்டிக் கொள்ளுங்கள், சாலை ஆக்கிரமிக்காதீர்கள் என்று கூறினர். இருந்தபோதும் கண்ணன் தொடர்ந்து வீடு கட்டும் பணியை மேற்கொண்டார். அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் பஞ்சாயத்து தலைவர் சசிக்குமாரிடம் (32) முறையிட்டனர். அவரும் வருவாய்த் துறையில் உள்ள நில அளவையரை அழைத்து வந்து கண்ணனுக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்தார். அப்போது கிராம சாலையில் 4 அடியை ஆக்கிரமித்து வீடு கட்டியது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கு வீடு கட்டக்கூடாதென பஞ்சாயத்து தலைவர் அறிவுறுத்தி சென்றார். இதனை மீறி கண்ணன் மீண்டும் வீடு கட்டவே, ஊர் பிரமுகர்கள் கண்ணனை அழைத்து நேற்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கண்ணன், அவரது மகன்கள் பொன்மணி (25), வெற்றிவேல் (23), செல்வக்குமார் (19) ஆகியோருடன் வந்தார். 4 அடி ஆக்கிரமித்து கட்டிய வீட்டை இடிக்க ஊர் பிரமுகர்கள் சொன்னதால் ஆத்திரமடைந்த கண்ணன், தனது மகன்களை அழைத்துக் கொண்டு பஞ்சாயத்து தலைவர் சசிக்குமார் வீட்டிற்கு நேற்று இரவு 10 மணிக்கு சென்றார். தான் கொண்டு சென்ற கடப்பாறை மூலம் பஞ்சாயத்து தலைவர் சசிக்குமாரின் வீட்டை இடிக்க முயற்சித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பஞ்சாயத்து தலைவர் சசிக்குமார் அவர்களை தடுத்து நிறுத்தினார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

    இதில் ஆத்திரமடைந்த கண்ணன் மற்றும் அவரது மகன்கள் கொடுவா கத்தியால் பஞ்சாயத்து தலைவரின் தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து சென்றனர். இதில் பலத்த காயமடைந்த சசிக்குமார் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் சசிக்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனு மதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்த பஞ்சாயத்து தலைவர் சசிக்குமார் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு கண்ணன் மற்றும் அவரது 3 மகன்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இது சம்மந்தமாக பொன்மணி, வெற்றிவேல், செல்வக்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கண்ணன் எங்குள்ளார் என்று அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சின்னசேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×