search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடங்குளம் அருகே  ஆஸ்பத்திரி முன்பு தகராறு; டீக்கடைக்காரர் கைது
    X

    கூடங்குளம் அருகே ஆஸ்பத்திரி முன்பு தகராறு; டீக்கடைக்காரர் கைது

    • கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் பகுதியை சேர்ந்த டாக்டர் அதே பகுதியில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார்.
    • அங்கு பணிபுரியும் நர்ஸ்களை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.

    வள்ளியூர்:

    கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் வேல்ராஜ் (வயது 39). டாக்டரான இவர் அதே பகுதியில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார்.

    அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் கண்ணன் (54). சம்பவத்தன்று இவர் வேல்ராஜ் நடத்தி வரும் மருத்துவமனை முன்பு நின்று அங்கு பணிபுரியும் நர்ஸ்களை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.

    இதுகுறித்து வேல்ராஜ் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வினுக்குமார் விசாரணை செய்து கண்ணனை கைது செய்தார்.

    Next Story
    ×