உள்ளூர் செய்திகள்
இலங்கை சிறைபிடித்த மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் - வெளியுறவு மந்திரிக்கு முதல்வர் கடிதம்
- தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது.
- அத்துடன், மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது.
சென்னை:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.