உள்ளூர் செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இலங்கை சிறைபிடித்த மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் - வெளியுறவு மந்திரிக்கு முதல்வர் கடிதம்

Published On 2022-07-25 12:40 GMT   |   Update On 2022-07-25 12:40 GMT
  • தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது.
  • அத்துடன், மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது.

சென்னை:

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News