உள்ளூர் செய்திகள்
முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
- பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 22 மனுக்கள் பெறப்பட்டன.
- 51 நபர்களுக்கு ரூ.6 லட்சத்து 58 ஆயிரத்து 970 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்க ளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார். இதில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். மொத்தம் 22 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும், முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் 51 நபர்களுக்கு ரூ.6 லட்சத்து 58 ஆயிரத்து 970 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட முப்படைவீரர் வாரிய உப தலைவர் மேஜர் பாலகிருஷ்ணன் (ஓய்வு), மாவட்ட அலுவலர்கள் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் மேஜர் சரவணன் (ஓய்வு) ஆகியோர் கலந்து கொண்டனர்.