- கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நடந்தது.
- மாணவ, மாணவி கள், ஆசிரியர்கள் ஏராள மானோர் கலந்து கொண்ட னர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை மேலத் தெரு மக்கள் சேவை அறக்கட்டளையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது அந்த வரிசையில் இந்த ஆண்டு 150 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை ஹமீதியா பெண் கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மேலத்தெரு மக்கள் சேவை அறக்கட்ட ளையின் கல்விக்கான இரண்டாம் கட்ட நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர் தலைமை யில் நடந்தது.
மேலத்தெரு ஓடக்கரை பள்ளி இமாம் அப்துல் கலாம் பாக்கவி கிராத் ஓதினார். மக்கள் சேவை அறக்கட்டளை சேவைகள் குறித்து பாடகர் லெப்பை தம்பி வாழ்த்தி பாடினார். மேலத்தெரு உஸ்வத்துன் ஹசனா முஸ்லிம் சங்க உறுப்பினர் கமால் முன்னி லை வகித்தார். கீழக்கரை நகர்மன்ற தலைவி செகானஸ் ஆபிதா, ஹமீதியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை நல்லம்மாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரமு கர்கள் மாணவிகளுக்கு உதவித்தொகையினை மக்கள் சேவை அறக்கட்ட ளை சார்பில் வழங்கினர். மேலத்தெரு சுலைமான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியை ஜாக்குலின் தா பெஸ்டஸ் நன்றியுரை கூறினார். விழா நிகழ்ச்சிகளை சமூக ஆர்வலர் ஜஹாங்கீர் அருஸி தொகுத்து வழங்கினார். இதில் மாணவ, மாணவி கள், ஆசிரியர்கள் ஏராள மானோர் கலந்து கொண்ட னர்.