search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "scholarship"

    • மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடம் இருந்து முறையாக சான்றிதழ் பெறப்பட்டு அந்த துறைக்கு பள்ளியின் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    • பொது சேவை மையங்கள் மற்றும் ஆன்லைன் சென்டர்களில் மக்கள் குவிந்து வருவதால் பல சென்டர்களில் சர்வர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று தெரிகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு பள்ளியில் படித்து வரும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்தும் தகுதியான சான்றிதழ் பெறப்பட்டு பள்ளியின் மூலமாக ஆதிராவிடர் நலத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு நலத்துறை விசாரித்து அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் 2023- 24 ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை குறித்து நலத்துறை மூலமாக இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. அதே வேளை யில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடம் இருந்து முறையாக சான்றிதழ் பெறப்பட்டு அந்த துறைக்கு பள்ளியின் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து நேற்று பல்வேறு பள்ளிகளில் ஆதிதிராவிடர் மாணவர்கள் அழைத்து கல்வி உதவித்தொகை பெற நாளை 30-ந்தேதிக்குள் ஆன்லைனில் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளிகளில் 2 நாட்களுக்குள் எப்படி விண்ணப்பிக்க முடியும் என்று புலம்புகின்றனர்.

    சான்றிதழ்கள் பெறுவதற்காக வருவாய் அலுவலகங்களில் பெற்றோர்கள் குவிந்து வருகின்றனர். பொது சேவை மையங்கள் மற்றும் ஆன்லைன் சென்டர்களில் மக்கள் குவிந்து வருவதால் பல சென்டர்களில் சர்வர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று தெரிகிறது.

    இதனால் பெற்றோர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் உள்ளனர்.

    இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறும்போது:- முன்பெல்லாம் தொடர்ந்து படிக்கும் மாணவர்கள் கல்வி ஊக்கத்தொகை பெற விண்ணப்பத்தை பள்ளியிலேயே புதுப்பித்து கொள்வோம். இப்போது மாணவர்கள் அனைவருமே ஆன்லைனில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அதுவும் 3 நாட்களில் சான்றிதழ்கள் பெற்று எப்படி விண்ணப்பிப்பது? அதிதிராவிடர் நலத்துறை தொடர்ந்து எங்களை அலை கழித்து வருகிறது. உடனடியாக இது குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் தலையிட்டு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய முறையை பின்பற்ற வேண்டும். அல்லது இறுதி தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மறவர் பொதுநல சங்கத்தின் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
    • முன்னாள் துணைவேந்தர் கல்வி உதவித்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசினார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அபி ராமம் கிராமத்தில் அனைத்து மறவர் பொது நல சங்கத்தின் 11-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழு வதும் உள்ள மாணவர்க ளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. மறவர் அறக் கட்டளை தலைவர் ஜெய ராம் தலைமை வகித்தார், செயலாளர் டாக்டர் அன்பழகன் வரவேற்றார்.அனைத்து மறவர் பொது நல சங்கத்தின் நிறுவன தலைவர் செல்லச்சாமி தேவர், அபிராமம் சேவல் முருகன், பார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட அமைப்பு செயலாளர் வீரப்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    சென்னை பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கவுரி நூற்றுக்கணக்கான மாண வர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசி னார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக முத்துச்சாமித்தேவர், கமுதி ஊராட்சி ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், மதுரை போஸ், மருத்துவர் கபிலன், பசும்பொன் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன், முகவை ஜெயராமன், பழனி முருகன், அபிராமம் பேரூ ராட்சி முன்னாள் தலைவர் குமணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஏற்பாடுகளை சத்திய மூர்த்தி, சண்முகவேல், ராஜசேகரபாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர். சங்கத்தின் பொருளாளர் காந்தி நன்றி கூறினார்.

    • அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தின் துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    தமிழக அரசின் வேலை வாய்ப்புத் துறையின் சார்பாக படித்து முடித்து வேலைவாய்ப்பற்ற இளை ஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் பொது பிரிவு பதிவுதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு உதவித் தொகை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாக விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி பொதுப்பிரிவு பதிவுரார்கள் கல்வித்தகுதி யினை இவ்வலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற பள்ளியிறுதி வகுப்பில் தேர்ச்சி பெறாத வர்கள் பள்ளியிறுதி வகுப்பு, மேல்நிலைக்கல்வி மற்றும் பட்டதாரி கல்வித் தகுதியை உடைய பதிவு தாரர்களுக்கு தற்போது உதவித்தொகை பெறுவ தற்கான விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். பட்டியல் இனத்தவருக்கு 45 வயது, இதர வகுப்பினர் 40 வயது இருக்க வேண்டும். உதவித்தொகை பெறுபவர் தமிழ்நாட்டி லேயே பள்ளி, கல்லூரிக் கல்வியை முடித்தவராக இருத்தல் வேண்டும்.

    உதவித்தொகை பெறுபவர் ஊதியம் பெறும் எந்த பணியிலோ அல்லது சுய வேலைவாய்ப்பிலோ இருக்க கூடாது. அரசு மற்றும் பிற முகமைகளின் வாயிலாக எந்த நிதி உதவியையும் பெறுபவராக இருத்தல் கூடாது. அன்றாடம் பள்ளிக்கு, கல்லூரிக்கு சென்று பயில் பவராகவோ இருக்க கூடாது.

    மேலும் அனைத் துவகை மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கென சிறப்பான உதவித்தொகை வழங்கும் திட்டமும் நடை முறையில் உள்ளது. மாற்றுத் திறனாளி பதிவுதாரர் இவ்வலுவலகத்தில் பதிவு செய்து குறைந்த பட்சம் ஓராண்டு முடிவுற்ற எழுதப்படிக்கத் தெரிந்த வர்கள் முதல் பட்டதாரிகள் வரை அனைவருக்கும் வருமானம் மற்றும் வயது வரம்பின்றி தற்போது உதவித்தொகை பெறு வதற்கான விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பயன்தாரர்கள் நவ.30-ந் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளித்து பயன்பெறலாம். மேலும், ஏற்கெனவே வேலை வாய்ப்பற்ற இளைஞர் உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகள் உதவித்தொகை பெற்று ஓராண்டு முடிவுற்றிருப்பின் தொடர்ந்து உதவித்தொகை பெறுவதற்கு வேலை வாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுச்சான்றிதழ், சுய உறுதிமொழி ஆவணம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் உடன் மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தினை தொடர்பு கொள்ளு மாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தின் துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள் ளார்.

    • வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
    • உதவித்தொகை பெறு பவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

    சிங்கம்புணரி

    தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்கா மல் உயிர்ப்பதிவேட்டில் காத்திருக்கும் இளைஞர்க ளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    முறையாக பள்ளியில் பயின்று 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்ற வர்களுக்கு மாதம் ரூ.200ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400ம், பட்டதாரிகளுக்கு (பி.இ. போன்ற தொழில்சார் பட்டப்படிப்பு தவிர) மாதம் ரூ.60டி வீதம் 3 ஆண்டுக ளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    இத்தொகை நேரடியாக மனுதார்களது வங்கி கணக்கில் காலாண்டுக்கொரு முறை வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தங்களின் கல்வித்தகுதிகளை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும்.

    தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனை யோர் 40 வயதுக்கு மிகா மலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் மிகாமல் இருத்தல் வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படமாட்டாது.

    தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித் தொகை பெறலாம். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 வருடம் வரை உதவித்தொகை பெற நாளது தேதி வரை வங்கி களில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் ஒப்படைத்து தொடர்ந்து உதவித்தொகை பெற்றுகொள்ளுமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறது. சுயஉறுதி மொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனா ளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.

    இந்த உதவித் தொகை பெறுவதற்கு மேற்காணும் தகுதிகள் உள்ளவர்கள் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலை வாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.

    விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களி லும் வருடம் முழுவதும் வழங்கப்படும். மேலும் உதவித்தொகை பெறு பவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்து ரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    • பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
    • 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகை

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இதர பிற்படுத்தப் பட்டோர், பொருளா தாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 9-ம் வகுப்பு, 11 -ம் வகுப்பு பயின்றுவரும் 3,093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித் தொகை வழங்கப் படும் எனவும் அதில் குறிப்பி டப்பட்டிருந்தது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகள், தேசியத் தேர்வு முகமையால் 29.09.2023 அன்று நடத்தப்பட விருந்த யசஸ்வி நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர் என தெரிவிக்கப்ப ட்டிருந்த நிலையில் தற்போது எழுத்து தேர்வானது காலப்பற்றாமை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும், 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்க தகுதியான வர்கள் எனவும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்ப டையிலேயே இந்த ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித் தொகை யானது வழங்கப்படும் எனவும் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிந்திட https://scholarships.gov.in மற்றும் ஒன்றிய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (http://socialjustice.gov.in) தொடர்ந்து நோக்கி கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • தொழிற்படிப்பு மற்றும் தொழில் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
    • .பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்திட கடைசி தேதி 30-11-2023 ஆகும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொழிற்படிப்பு மற்றும் தொழில் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. ஒரு வருடத்திற்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு ரூ.30,000 எனவும், மாணவிகளுக்கு 36,000 எனவும் வழங்கப்படுகிறது.பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்திட கடைசி தேதி 30-11-2023 ஆகும்.

    மேலும் விவரங்கள் அறிந்திட திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0421-2971127 வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாய்ப்பினை முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் பயன்படுத்தி கொண்டு 30-11-2023-க்குள் www.ksb.gov.in என்ற கே.எஸ்.பி., இணையதளத்தில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.   

    • கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கான இணையதளம் அக்டோபா் 18-ந் தேதி முதல் செயல்படத் தொடங்கும்.
    • சீா்மரபினா் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சாா்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    அரசு ஒதுக்கீட்டின்கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சாா்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:- அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், தனியாா் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சாா்பில் பல்வேறு திட்டங்களின்கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3- ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின்கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிறபடிப்புகளுக்கு பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.நிகழாண்டில் புதுப்பித்தல் மாணவா்கள் இணையதள முகவரியில் சென்று ஆதாா் எண்ணை அளித்து இணைக்க செய்ய வேண்டும்.இதில் ஏதாவது இடா்பாடு ஏற்படும் பட்சத்தில் தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித் தொகை உதவியாளரை ஆதாா் எண் நகலுடன் அணுக வேண்டும்.

    கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கான இணையதளம் அக்டோபா் 18-ந் தேதி முதல் செயல்படத் தொடங்கும்.இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித் தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0421- 2999130 என்ற எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தொழிலாளர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
    • மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கார்த்தி கேயன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    1972-ம் ஆண்டு தமிழ் நாடு தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி தொழிற் சாலைகள், கடைகள், மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்கள், உணவு நிறு வனங்கள் மற்றும் தோட்ட நிறுவ னங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங் களில் பணிபுரியும் தொழி லாளர் களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் மற்றும் நிறு வனத்தின் பங்காக ஒவ் வொரு தொழி லாளிக்கும் ரூ.60 என கணக்கிட்டு நிறு வனத்தில் பணிபுரியும் தொழி லாளர் களின் எண்ணிக்கைக்கேற்ப தொழிலாளர் நல நிதி தொகையினை வாரிய த்திற்கு செலுத்த வேண்டும்.

    அதன்படி நடப்பு 2023ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியினை 31.01.2024-க்குள் செலுத்த வேண்டும்.

    அவ்வாறு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழி லாளர்கள் மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கு வாரி யத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    அதில் ப்ரீ-கே.ஜி முதல் பட்ட மேற்படிப்பு வரை பயிலும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ரூ.1000 முதல் ரூ.12000 வரை கல்வி உதவித் தொகை, பாடநூல் வாங்க உதவித்தொகை, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாண வர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை ஆகிய திட்டங் களுக்கு தொழி லாளர் களிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்வுதவித் தொகையினை பெற தொழிலாளரின் மாத ஊதியம் (Pay+ DA) ரூ.25,000-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் வாரியத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.12.2023 ஆகும்.

    விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.lwb.tn.gov.in என்ற இணைய தளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்யப்பட்ட விண்ணப் பங்கள் "செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை-6 என்ற முகவரிக்கு 31.12.2023க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

    மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணை யர் (அமலாக்கம்) கார்த்தி கேயன் தெரிவித்து உள்ளார்.

    • படகு உரிமையாளர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி உதவித்தொகைமாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார்
    • நாட்டுப்படகு உரிமையாளர் ஒருவருக்கு ரூ.1,லட்சத்து 50 ஆயிரமும் வழங்கிட ஆணையிடப்பட்டது.

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் 2 விசைப்படகுகள் மற்றும் 1 நாட்டு படகு இலங்கை அரசினால் கைப்பற்றப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, 3 படகு உரி மையாளர்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதி உதவித்தொ கைக்கான காசோலைகளை, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமை ச்சரால், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் விசைப்ப டகுகள் இலங்கை அரசினால் கைப்ப ற்றப்பட்டு, இலங்கையின் பல்வேறு கடற்ப டை த்தளங்களில் பயன்படுத்த இயலாத நிலையில் நிறுத்தி வைக்க ப்பட்டுள்ளதற்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் 2 விசைப்படகு உரிமை யாளர்களுக்கு ரூ.10 லட்சமும், நாட்டுப்படகு உரிமையாளர் ஒருவருக்கு ரூ.1,லட்சத்து 50 ஆயிரமும் வழங்கிட ஆணையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மணமேல்குடி வட்டத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி, மரிய சாமுவேல் ஆகியோரின் 2 விசைப்படகு உரிமையாளர்களுக்கும் மற்றும் ஜெயஇருதயம் என்பவரின் 1 நாட்டுப்படகு உரிமையாளருக்கும் என மொத்தம் 3 படகு உரிமையாளர்களுக்கு, ரூ.1,லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான முதலைமச்சரின் பொது நிவாரண நிதி உதவித் தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மு.செய்யது முகம்மது, துணை இயக்குநர் (மீன்வளத்துறை) சர்மிளா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

    • மூத்தோரை கவுரவித்து நினைவு பரிசு வழங்குதல்,கல்வி பரிசளிப்பு மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா, அதைத்தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.
    • 100 க்கு 100 மற்றும் 200 க்கு 200 மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

    உடுமலை,செப்.25-

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பூமாலை சந்தில் ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அரங்கத்தில் தேவாங்கர் சமூக நல மன்றம் மற்றும் தேவாங்கர் சமூக கல்வி அறக்கட்டளை சார்பில் மூத்தோரை கவுரவித்து நினைவு பரிசு வழங்குதல்,கல்வி பரிசளிப்பு மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா, அதைத்தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.முன்னதாக ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அதில் அனைவரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் 75 வயது நிறைவடைந்த மூத்தவர்கள் கௌரவிக்கப் பட்டனர். தொடர்ந்து 2023 -ம் ஆண்டு 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு- சான்றிதழ் வழங்கப்பட்டது.

    அதன்படி 10-ம் வகுப்பில் 11 மாணவர்களுக்கும், பிளஸ்-2வகுப்பில் 6 மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.அத்துடன் 100 க்கு 100 மற்றும் 200 க்கு 200 மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மேலும் மேற்படிப்புக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மேஜிக் ஷோ நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தேவாங்கர் சமூக நல மன்றத்தலைவர் மாணிக்கம்(பொறுப்பு), செயலாளர் திருமலைசாமி(பொறுப்பு), பொருளாளர் சீனிவாசன், தேவாங்கர் சமூக கல்வி அறக்கட்டளை தலைவர் சீனிவாசன்,செயலாளர் சௌந்தரராஜன், பொருளாளர் ஞானமணி உள்ளிட்ட நிர்வாகிகள் ,தேவாங்கர் சமூக பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்க ளுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்கா மல் காத்திருக்கும் இளை ஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    முறையாக பள்ளியில் பயின்று 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதா ரிகளுக்கு (பி.இ. போன்ற தொழில்சார் பட்டப்படிப்பு தவிர) மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப் பட்டு வருகிறது.

    இத்தொகை நேரடியாக மனுதார்களது வங்கி கணக்கில் காலாண்டுக்கொரு முறை வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களின் கல்வித்தகுதிகளை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். தொடர்ந்து பதி வினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனை யோர் 40 வயதுக்கு மிகா மலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த உதவித்தொகை பெற விரும்புவோர்கள் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்து கல்விச் சான்று கள், வேலைவாய்ப்பு அடை யாள அட்டை ஆகிய வற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் சமர்ப்பித்து பயனடைய லாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 535 பேர் முதியோர் உதவித்தொகை பெற்று பயனடைந்துள்ளனர்
    • கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தகவல்

    கரூர்,  

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது,

    தமிழ்நாடு அரசு, சமுதா யத்தில் நலிவடைந்த பிரிவி னர்களைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு ஓய்வூ திய திட்டங்களைச் செய ல்படுத்தி வருகிறது. அதும ட்டுமல்லாமல், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் வாயிலாக ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகை யில் ஓய்வூதிய திட்டங்களை வழங்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்க ள் நடைமுறையில் இருக்கி ன்றன. தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், இந்திரா காந்தி மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி கைம்பெண்கள் ஓய்வூ தியத் திட்டம், மாற்றுத்தி றனாளிகள் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்றோர் ஓய்வூதிய திட்டம், போன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    கடந்த 10 வருடங்களாக உயர்த்தப்படாமல் இருந்த முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சமூக ப்பா துகாப்புத் திட்டங்களின் வாயிலாக வழங்கப்பட க்கூடிய உதவித்தொகையை, தமிழ்நாட்டு மக்களின் நலனில் மிகுந்த அக்கறையு டன், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமை ச்சர் முதியோர் உதவித்தொ கை உள்ளிட்ட பல்வேறு சமூகப்பாதுகாப்பு திட்டங்க ளின் வாயிலாக வழங்கப்ப ட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத்தொகையான 1000 ரூபாயை 1,200 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.

    அதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில், கரூர் வட்டத்தில் 14,759 மண்மங்க ளம் வட்டத்தில் 7,085, புகளூர் வட்டத்தில் 5469, அரவக்குறிச்சி வட்டத்தில் 7.474. கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் 6,328 குளித்தலை வட்டத்தில் 9,349, கடவூர் வட்டத்தில் 4,071, என மொத்தம் 54 ஆயிரத்து 535 பயனாளிகள் முதியோர் உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

    ×