உள்ளூர் செய்திகள்

பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகள் திருட்டு

Published On 2022-07-13 09:05 GMT   |   Update On 2022-07-13 09:05 GMT
  • பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகள் திருட்டப்பட்டது.
  • அவற்றின் மதிப்பு ரூ.1.16 லட்சம் ஆகும். இதுகுறித்து தகவல் அறிந்த தேவிபட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் கழனிக்குடியைச் சோ்ந்த சண்முகநாதன் மனைவி ஜனனி (வயது 30). இவா் நேற்று பகல் ராமநாதபுரத்தில் உள்ள வங்கிக்கு சென்றாா்.

மீண்டும் ஊா் திரும்பிய நிலையில், வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த தங்கச்சங்கிலிகள், தோடுகள், பதக்கங்கள், மோதிரம், பிரேஸ்லெட் என ஏழரைப் பவுன் எடையுள்ள நகைகள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

அவற்றின் மதிப்பு ரூ.1.16 லட்சம் ஆகும். இதுகுறித்து தகவல் அறிந்த தேவிபட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பட்டப்பகலில் மாற்று சாவி மூலம் வீட்டைத் திறந்து மா்ம நபா்கள் நகைகளை திருடி இருப்பது தெரியவந்தது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா்.

Tags:    

Similar News