உள்ளூர் செய்திகள்
- மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக லாரி மோதியது.
- படுகாயம் அடைந்த கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மாடாகுடி காலனி தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 70).
சம்பவத்தன்று இவர் சென்னியமங்கலம் மெயின்ரோடு அருகே சென்று காண்டிருந்தார்.
அங்கு நின்ற லாரி ஒன்று பின்னால் இயக்கப்பட்டபோது எதிர்பாராதவிதமாக கண்ணன் மீது மோதியது.
இதில், படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தகர்.
அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.