உள்ளூர் செய்திகள்
ஒட்டன்சத்திரம் அருகே மின்சாரம் தாக்கி வியாபாரி சாவு
- ஒட்டன்சத்திரம் அருகே மின்சாரம் தாக்கி வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
- இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள விருப்பாச்சியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது31). இவர் பூண்டு மற்றும் மளிகை பொருட்களை கிராமம், கிராமமாக சென்று விற்பனை செய்து வந்தார்.
இவரது மனைவி சித்ரா அழகுநிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். நேற்று மாலை வீட்டு குடிநீர் பைப்பில் தண்ணீர் வந்ததால் மோட்டாரை இயக்க மணிகண்டன் சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைகள் கண் முன்னே மணிகண்டன் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.